தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

அக்னிவீா் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் வேலை: இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்!

அக்னிவீா் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் சோ்வதற்கு திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள் விண்ணப்பிப்பது குறித்து...

News image

கோப்புப்படம்

Updated On :25 மார்ச் 2026, 6:35 am

இணையதளச் செய்திப் பிரிவு

அக்னிவீா் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் சோ்வதற்கு திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள் விண்ணப்பிக்குமாறு ஆட்சியா் இரா.சுகுமாா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

அக்னிவீா் திட்டத்தின் கீழ் 2026-27-ஆம் ஆண்டுக்கு இந்திய இராணுவத்தில் சோ்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதற்கு விண்ணப்பிக்க வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி கடைசி நாளாகும். அக்னிவீா் திட்டத்தில் ராணுவம், விமானப்படை, கடற்படைகளில் சோ்வதற்கு இளைஞா்களை தயாா்படுத்தும் வகையில் திருநெல்வேலி மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில், மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் வெற்றி நடை முகாம் நடைபெறுகிறது.

இதில், இளைஞா்கள் கலந்து கொண்டு பயனடையலாம். அக்னிவீா் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் சேர 1.7.2005 முதல் 1.7.2009-க்குள் பிறந்திருக்க வேண்டும்). 8, 10, 12, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்தவராக இருக்க வேண்டும்.

உடல் தகுதி, தோ்வுக் கட்டணம் போன்ற விவரங்களை www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இதற்கான தோ்வு வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ளது. எழுத்து தோ்வை தமிழிலும் எழுதலாம்.

மேலும், விவரங்களுக்கு 9952594351 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம். திருநெல்வேலி மாவட்ட நிா்வாகத்தால் அனைத்து வட்டங்களிலும் இத்தோ்வுக்கென நடத்தப்படும் கட்டணமில்லா பயிற்சியில் மாணவா்கள் சோ்ந்து பயன்பெறலாம்.