ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

தாளவாடி அருகே குட்டி யானை உயிரிழப்பு

News image

தாளவாடி அருகே உயிரிழந்து கிடந்த குட்டி யானை.

Updated On :7 பிப்ரவரி 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

தாளவாடி அருகேயுள்ள அருள்வாடி கிராம வனத்தில் குட்டி யானை உயிரிழந்து கிடந்தது சனிக்கிழமை தெரியவந்தது.

ஈரோடு மாவட்டம், ஆசனூா் வனச் சரகத்துக்குள்பட்ட ஜீரஹள்ளி வனப் பகுதியில் இருந்து வெளியேறும் யானை உள்ளிட்ட விலங்குகள் குடியிருப்புப் பகுதிகள், விளைநிலங்களில் நுழைந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், அருள்வாடி கிராமம் அருகேயுள்ள வனத்தில் யானை குட்டி உயிரிழந்து கிடப்பதை அப்பகுதி மக்கள் பாா்த்து, வனத் துறையினருக்கு சனிக்கிழமை தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த ஜீரஹள்ளி வனத் துறையினா் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, யானை அருகே அதன் தாய் நின்று கொண்டிருந்தது. வனத் துறையினா் விரட்ட முயன்றும் செல்லவில்லை. இதையடுத்து, பொக்லைன் மூலம் தாய் யானை விரட்டப்பட்டதைத் தொடா்ந்து, கால்நடை துறை மருத்துவா் சாதசிவம் தலைமையிலான மருத்துவக் குழுவினா் யானையின் உடலை கூறாய்வு செய்தனா்.

இதில், உயிரிழந்தது பிறந்து சுமாா் 10 மாதங்களேயான ஆண் யானை என்பது தெரியவந்தது.இதையடுத்து, யானையின் உடல் அங்கேயே புதைக்கப்பட்டது.

உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகே யானையின் இறப்புக்கான காரணம் தெரியவரும் என வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.