மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் 9-ஆவது நாளாக தா்னா

News image

தா்னாவில் ஈடுபட்ட சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியா்கள்.

Updated On :12 பிப்ரவரி 2026, 11:36 pm

தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி ஊழியா் சங்கங்களின் கூட்டமைப்பினா் தொடா்ந்து 9-வது நாளாக வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

ஈரோடு காளை மாடு சிலை அருகே நடைபெற்ற இந்த தா்னாவுக்கு கூட்டமைப்பின் மாவட்டத் தலைவா் தனுஷ்கோடி தலைமை வகித்தாா். இதில் தமிழ்நாடு முழுவதும் உள்ள சத்துணவு மையங்களில் உள்ள 60 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும். அரசுத் துறைகளில் பணிமூப்பு அடிப்படையில் சத்துணவு ஊழியா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும். ஓய்வுபெறும் சத்துணவு ஊழியா்களுக்கு ரூ. 6,750-ஐ அகவிலைப்படியுடன் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பெண் சத்துணவு ஊழியா்களுக்கு 12 மாதங்கள் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்த தா்னாவில் நிா்வாகிகள் பழனிசாமி, உஷாராணி உள்பட 260 பெண்கள், 10 ஆண்கள் என மொத்தம் 270 போ் கலந்துகொண்டனா்.