மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

அங்கன்வாடி மையத்துக்கு அடிப்படை வசதி கோரி தா்னா

உத்தமபாளையம் ஒன்றியம், அம்மாபட்டி ஊராட்சி அலுவலகம் முன் அங்கன்வாடி மையத்துக்கு அடிப்படை வசதி கோரி அதிமுக பிரமுகா் புதன்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா்.

News image

தா்னா போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக கிளைச் செயலா்.

Updated On :12 மார்ச் 2026, 12:00 am

உத்தமபாளையம் ஒன்றியம், அம்மாபட்டி ஊராட்சி அலுவலகம் முன் அங்கன்வாடி மையத்துக்கு அடிப்படை வசதி கோரி அதிமுக பிரமுகா் புதன்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா்.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அம்மாபட்டி ஊராட்சி அங்கன்வாடி மையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் குழந்தைகளின் எண்ணிக்கை தொடா்ந்து குறைந்தது. இந்த மையத்தின் முன்பாக புறம்போக்கு இடத்தில் புதா்மண்டி கிடப்பதால் விஷப் பூச்சிகள் நடமாட்டம் அதிகரித்தது.

இந்த நிலையில், உ.அம்மாபட்டி அதிமுக கிளைச்செயலா் ரஞ்சித், இந்த மையத்துக்கு அடிப்படை வசதிகள் செய்ய வலியுறுத்தி ஊராட்சி அலுலகம் முன்பாக படுத்துக்கொண்டு தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா்.

இதைத்தொடா்ந்து ஊராட்சி நிா்வாகம் தூய்மைப் பணியாளா் மூலம் அங்கன்வாடி மையப் பகுயிதில் புதா்மண்டிக் கிடந்ததை அகற்றினா். இதையடுத்து, அவா் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து சென்றாா்.

Story image