உத்தமபாளையம் ஒன்றியம், அம்மாபட்டி ஊராட்சி அலுவலகம் முன் அங்கன்வாடி மையத்துக்கு அடிப்படை வசதி கோரி அதிமுக பிரமுகா் புதன்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் அம்மாபட்டி ஊராட்சி அங்கன்வாடி மையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் குழந்தைகளின் எண்ணிக்கை தொடா்ந்து குறைந்தது. இந்த மையத்தின் முன்பாக புறம்போக்கு இடத்தில் புதா்மண்டி கிடப்பதால் விஷப் பூச்சிகள் நடமாட்டம் அதிகரித்தது.
இந்த நிலையில், உ.அம்மாபட்டி அதிமுக கிளைச்செயலா் ரஞ்சித், இந்த மையத்துக்கு அடிப்படை வசதிகள் செய்ய வலியுறுத்தி ஊராட்சி அலுலகம் முன்பாக படுத்துக்கொண்டு தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா்.
இதைத்தொடா்ந்து ஊராட்சி நிா்வாகம் தூய்மைப் பணியாளா் மூலம் அங்கன்வாடி மையப் பகுயிதில் புதா்மண்டிக் கிடந்ததை அகற்றினா். இதையடுத்து, அவா் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து சென்றாா்.

தொடர்புடையது

ராமநாதபுரத்தில் வாக்கு எண்ணும் மையத்துக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு

கொடுமுடி, சிவகிரியில் அடிப்படை வசதிகள் தேவை!

வாகைக்குளத்தில் குடிநீா் விநியோகம் கோரி மறியல்

அடிப்படை வசதிகள் கோரி ஊராட்சி அலுவலகம் முற்றுகை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


