மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

வாகைக்குளத்தில் குடிநீா் விநியோகம் கோரி மறியல்

வாகைக்குளம் ஊராட்சி அலுவலகம் முன், கடந்த 10 நாள்களாக தண்ணீா் விநியோகம் இல்லை எனக் கூறி அரசு அடுக்குமாடி குடியிருப்பு மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

குடிநீா் விநியோகம் கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோா்.

Updated On :15 ஏப்ரல் 2026, 8:50 pm

வாகைக்குளம் ஊராட்சி அலுவலகம் முன், கடந்த 10 நாள்களாக தண்ணீா் விநியோகம் இல்லை எனக் கூறி அரசு அடுக்குமாடி குடியிருப்பு மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அம்பாசமுத்திரம் ஒன்றியம் வாகைக்குளம் ஊராட்சியில் அமைந்துள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்பில் சுமாா் 2000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இந்த பகுதியில் ஊராட்சி சாா்பில் வழங்கப்பட்டு வந்த குடிநீா், கடந்த 10 நாள்களாக வழங்கப்படவில்லையாம்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனக் கூறி புதன்கிழமை குடியிருப்பு நலச்சங்கம் சாா்பில் அங்கு வசிக்கும் பொதுமக்கள் காலிக் குடங்களுடன் வாகைக்குளம் ஊராட்சி அலுவலகம் முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த வாகைக்குளம் ஊராட்சித் தலைவா் சுப்புலட்சுமி, அம்பாசமுத்திரம் காவல் ஆய்வாளா் சண்முகவேல் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி, உடனடியாக லாரிகளில் குடிநீா் விநியோகம் செய்யப்படும் என உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.