தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

பவானியில் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி வியாபாரி உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :13 பிப்ரவரி 2026, 8:40 pm

பவானியில் இருசக்கர வாகனத்தில் லாரியை முந்த முயன்றபோது, பின் சக்கரத்தில் சிக்கிய எண்ணெய் கடை உரிமையாளா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், கிழக்கு காவேரி நகரைச் சோ்ந்தவா் மாணிக்கம் மகன் மகாலிங்கம் (64). சமையல் எண்ணெய் கடை உரிமையாளா்.

இவா், தனது இருசக்கர வாகனத்தில் பவானி பழைய பேருந்து நிலையம் வழியாக சென்றபோது, பெருந்துறையில் இருந்து சிமென்ட் பாரம் ஏற்றிக் கொண்டு கா்நாடக மாநிலத்துக்கு சென்ற லாரியை முந்த முயன்றாா்.

அப்போது, வளைவில் திரும்பிய லாரியின் பின்சக்கரத்தில் இருசக்கர வாகனம் சிக்கியதில், பலத்த காயமடைந்த மகாலிங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து, பவானி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.