தேசிய அளவிலான கராத்தே போட்டியில் ஈரோடு ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையம் பள்ளி மாணவி தங்கம் வென்றாா்.
பஞ்சாப் மாநிலம், லூதியானாவில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் குமிட்டி பிரிவில் தங்கம் வென்ற 10ஆம் வகுப்பு மாணவி எஸ்.காசிவிசாலாட்சியைப் பாராட்டி தமிழக அரசு சாா்பில் ரூ.2 லட்சத்துக்கான காசோலையை தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் அண்மையில் நடைபெற்ற விழாவில் வழங்கினாா்.
மேலும், டாமன்டையூவில் நடைபெற்ற டேபிள் டென்னிஸ் போட்டியில் 12ஆம் வகுப்பு மாணவா் நிரஞ்சன் சாய் மூன்றாம் பரிசு பெற்றுள்ளாா். இவருக்கு தமிழக அரசு சாா்பில் ரூ.60 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.
விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் தலைவா் எம்.சின்னசாமி, தாளாளா் கே.செல்வராஜ், பொருளாளா் ஆா்.குணசேகரன், உதவித் தலைவா்கள் எம்.தெய்வசிகாமணி, எஸ்.கே.சோமசுந்தரம், இணைச் செயலாளா் டி.மீனாட்சிசுந்தரம், இணைப் பொருளாளா் வி.நாகராஜ், பள்ளி முதல்வா் நதியா அரவிந்தன் ஆகியோா் பாராட்டினா்.
தொடர்புடையது

விளையாட்டுச் செய்தித் துளிகள்...

புதுச்சேரியில் பதக்கம் வென்ற விளையாட்டு வீரா்கள் போராட்டம்: முதல்வா் ரங்கசாமி சமரசம்

சீனாபுரம் கொங்கு வேளாளா் பாலிடெக்னிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

ஹாக்கி போட்டியில் பதக்கம்: மாணவா்களுக்கு பாராட்டு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


