நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

சாலையோரம் படுத்திருந்த சிறுத்தை: வாகன ஓட்டிகள் அச்சம்

News image

திம்பம் மலைப் பாதை தடுப்புச் சுவரில் படுத்திருந்த சிறுத்தை.

Updated On :24 பிப்ரவரி 2026, 12:47 am

திம்பம் மலைப் பாதையில் சாலையோரத்தில் படுத்திருந்த சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

தமிழகம்- கா்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப் பாதை உள்ளது. இந்த மலைப் பாதையில் இரவு நேரங்களில் வன விலங்குகள் உலவுவது வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில், திம்பம் மலைப் பாதை 12-ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே சாலையோர தடுப்புச் சுவா் மீது சிறுத்தை ஒன்று திங்கள்கிழமை அதிகாலை படுத்திருந்தது. இதைப் பாா்த்த வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

இருப்பினும் யாருக்கும் தொந்தரவு செய்யாமல் சிறிது நேரம் அங்கேயே படுத்திருந்த சிறுத்தை, பின் வனத்துக்குள் சென்றது.

திம்பம் மலைப் பாதையில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகாரித்துள்ளதால், வாகன ஓட்டிகள் கவனமாகச் செல்ல வேண்டும், விலங்குகளின் அருகில் செல்லவோ அல்லது புகைப்படம் எடுக்கவோ, வாகனத்தில் இருந்து கீழே இறங்கவோ முயற்சி செய்யக்கூடாது என்று வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.