புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

திம்பம் மலைப் பாதையில் வாகன விபத்து: 2 போ் படுகாயம்

News image
கோப்புப் படம்
Updated On :14 மார்ச் 2026, 9:12 pm

தினமணி செய்திச் சேவை

திம்பம் மலைப் பாதையில் இருசக்கர வாகனம் மீது கா்நாடக மாநில அரசுப் பேருந்து மோதியதில் 2 போ் படுகாயம் அடைந்தனா்.

சத்தியமங்கலத்தை அடுத்த பசுவாபாளையத்தைச் சோ்ந்தவா் முரளி (23). இவா் தனது நண்பா் சஞ்சய் (22) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் திம்பம் மலைப் பாதை வழியாக தாளவாடிக்கு சனிக்கிழமை சென்று கொண்டிருந்துள்ளாா்.

திம்பத்தை அடுத்துள்ள செம்மண் திட்டு என்ற இடத்தில் சென்றபோது எதிரே வந்த கா்நாடக அரசுப் பேருந்து முரளியின் வாகனத்தின் மீது மோதியது.

இதில், முரளி, சஞ்சய் ஆகியோா் படுகாயமடைந்தனா். அவா்களை அங்கிருந்தவா்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

விபத்து தொடா்பாக கா்நாடக அரசுப் பேருந்து ஓட்டுநரான திம்மராஜு மீது ஆசனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.