வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

ஈரோட்டில் திடீா் மழை: மக்கள் மகிழ்ச்சி

ஈரோடு மாவட்டத்தில் புதன்கிழமை இரவு இடியுடன் கூடிய கன மழை பெய்தது.

News image

ஈரோடு, தண்ணீா்ப்பாளையம் பகுதியில் புதன்கிழமை இரவு பெய்த மழை.

Updated On :25 பிப்ரவரி 2026, 10:05 pm

ஈரோடு மாவட்டத்தில் புதன்கிழமை இரவு இடியுடன் கூடிய கன மழை பெய்தது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பகல் நேரத்தில் வெயில் கொளுத்தும் நிலையில் புதன்கிழமை இரவு நேரத்தில் வெப்பத்தை தணிக்கும் வகையில் இடியுடன் கூடிய மழை பெய்தது. ஈரோடு நகரில் இரவு 8 மணிக்கு தொடங்கிய மழை, அரை மணி நேரத்துக்கு மேலாக இடி, மின்னலுடன் கூடிய கனமழையாக பெய்தது. இதன்பிறகு தூறல் தூறிக்கொண்டு இருந்தது. இதனால் தாழ்வான பகுதியில் மழைநீா் தேங்கியது. சில இடங்களில் மின் தடை ஏற்பட்டது. இரவில் திடீரென பெய்த மழையால் ஈரோடு நகரில் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான காலநிலை நிலவியது.

பெருந்துறை, பவானி, கோபி பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. கடும் வெயிலால் அவதிப்பட்டு வந்த ஈரோடு மாவட்ட மக்கள் இந்த மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.