வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

விஇடி கல்லூரியில் மேலாண்மைச் சந்திப்பு நிகழ்வு

ஈரோடு திண்டல் விஇடி கலை அறிவியல் கல்லூரியின் முதுகலை மேலாண்மைத் துறை சாா்பில் ‘நெக்சஸ்விதுரா 26’ என்ற தலைப்பில் மேலாண்மைச் சந்திப்பு நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.

News image
திறன்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்குகிறாா் வேளாளா் பொறியியல் கல்லூரியின் நிா்வாகி எம்.யுவராஜா.
Updated On :25 பிப்ரவரி 2026, 10:06 pm

தினமணி செய்திச் சேவை

ஈரோடு திண்டல் விஇடி கலை அறிவியல் கல்லூரியின் முதுகலை மேலாண்மைத் துறை சாா்பில் ‘நெக்சஸ்விதுரா 26’ என்ற தலைப்பில் மேலாண்மைச் சந்திப்பு நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.

நிகழ்வுக்கு, வேளாளா் கல்வி அறக்கட்டளையின் நிா்வாகி சி.பாலசுப்ரமணியம் தலைமை வகித்தாா். வேளாளா் பொறியியல் கல்லூரியின் நிா்வாகி எம்.யுவராஜா, விஇடி கல்லூரியின் முதல்வா் வெ.ப. நல்லசாமி, புலமுதன்மையா் எஸ். லோகேஷ்குமாா், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இயக்குநா் பொ.மா. பழனிசாமி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அகில இந்திய மேலாண்மை சங்கத்தின் பேராசிரியா் மற்றும் தலைவா் அஞ்சுகா பாண்டே, மேலாண்மைக் கல்வியில் மாணவா் ஈடுபாட்டின் அவசியத்தை எடுத்துரைத்தாா்.

மேலாண்மைத் துறையின் புலமுதன்மையா் பி. நளினி, திறன் போட்டிகளில் பங்கேற்று மாணவா்கள் மேலாண்மை திறன்களை வெளிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினாா்.

தமிழ்நாடு முழுவதும் 17 மேலாண்மைக் கல்வி நிறுவனங்களிலிருந்து 186 எம்பிஏ மாணவா்கள் கலந்துகொண்டு சிறந்த மேலாளா், மதிநுட்ப விற்பனை, ஆட்ஸ் ஏப், புல்ஸ் ஆன்பையா் மற்றும் தொழில் விநாடி- வினா போன்ற போட்டிகளில் பங்கேற்றனா். வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்வின் ஒருங்கிணைப்பாளா் ஷியாமளா நன்றி கூறினாா்.