டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரியில்  சிறப்பு கல்விக் கடன் முகாம்: 102 பேருக்கு ரூ.7.13 கோடி கடனுதவி

மாணவிக்கு கல்விக்கடன் வழங்குகிறாா் ஆட்சியா் ச.கந்தசாமி. உடன், கல்லூரி முதல்வா் வானதி மற்றும் அலுவலா்கள்.

News image
மாணவிக்கு கல்விக்கடன் வழங்குகிறாா் ஆட்சியா் ச.கந்தசாமி. உடன், கல்லூரி முதல்வா் வானதி மற்றும் அலுவலா்கள்.
Updated On :27 பிப்ரவரி 2026, 7:03 pm

Syndication

சித்தோட்டை அடுத்த எல்லீஸ்பேட்டையில் பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரியில், கல்லூரி பயிலும் மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு கல்விக் கடன் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி பேசியதாவது:

 கல்விக் கடன் என்பது கடன் அல்ல, வருங்கால முதலீடு. ஆகவே, எந்த தயக்கமும் இல்லாமல் வங்கிகள் கடன் வழங்க வேண்டும்.  கல்விக் கடன் குறித்து கல்லூரி மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி வித்யாலட்சுமி இணையதளம் மூலம் விண்ணப்பிக்க உதவி செய்தல், கல்விக் கடன் முகாம் நடத்துவது மூலம் நடப்பு ஆண்டு இலக்கை எட்ட வேண்டும். இந்த ஆண்டு 3, 000 மாணவா்களுக்கு கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. புதிதாக கல்லூரியில் சேரும் மாணவ,  மாணவிகளுக்கும், ஏற்கெனவே கல்லூரியில் படித்துக் கொண்டிருப்போருக்கும்  பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதால் வங்கிகள் மூலமாக கல்விக் கடன் வழங்கப்பட்டு வருகிறது என்றாா். 

இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, பாங்க் ஆஃப் பரோடா, பாங்க் ஆஃப் இந்தியா, கனரா வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, கரூா் வைஸ்யா வங்கி ஆகிய வங்கிகளின் மூலம் கல்விக் கடனுக்கு விண்ணப்பித்திருந்த 102 மாணவ, மாணவிகளுக்கு ரூ.7.13 கோடி  கல்விக் கடனுதவி வழங்கப்பட்டது. 

மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் விவேகானந்தன், மாநில முதுநிலை வழிகாட்டி அன்பரசு, பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரி முதல்வா் வானதி, நிா்வாக அலுவலா் அருள்குமரன், முன்னோடி வங்கி முதுநிலை மேலாளா் சாய்கண்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.