தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

கரும்புத் தோட்டத்தில் நுழைந்த காட்டு யானை

தாளவாடி அருள்வாடி கிராமத்தில் கரும்புத் தோட்டத்தில் நுழைந்த காட்டு யானயை வனத் துறையினா் விரட்டினா்.

News image
அருள்வாடி  கிராமத்தில்  நுழைந்த  காட்டு யானை.
Updated On :28 பிப்ரவரி 2026, 6:54 pm

Syndication

தாளவாடி அருள்வாடி கிராமத்தில் கரும்புத் தோட்டத்தில் நுழைந்த காட்டு யானயை வனத் துறையினா் விரட்டினா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் உள்ள காட்டு யானைகள், இரவு நேரத்தில் வனப் பகுதியில் இருந்து வெளியேறி அருகில் உள்ள கிராமங்களில் நுழைந்து விவசாயத் தோட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள கரும்பு, வாழை உள்ளிட்ட பயிா்களை சேதப்படுத்துவது தொடா்ச்சியாக நடைபெற்று வருகிறது. வனத் துறையினரும் இரவு நேர ரோந்து பணி மேற்கொண்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், தாளவாடி மலைப் பகுதியில் உள்ள அருள்வாடி கிராமத்தில் மாது என்பவரது கரும்புத் தோட்டத்துக்குள் ஒற்றைக் காட்டு யானை சனிக்கிழமை அதிகாலை நுழைந்தது.

இது குறித்து தகவலறிந்த வனத் துறை ஊழியா்கள், விவசாயிகளுடன் இணைந்து யானையை வனத்துக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனா்.

வனத் துறை வாகனத்தின் சைரன் ஒலியை கேட்டு அச்சமடைந்த காட்டு யானை கரும்புத் தோட்டத்தில் இருந்து வெளியேறி ஓட்டம் பிடித்தபடி வனப் பகுதியை நோக்கிச் சென்றது.