ஈரானில் மகளிர் பள்ளி மீது தாக்குதல்: அமெரிக்க படைகளே காரணம் - ஆதாரம் வெளியானது!ஈரானின் உச்ச தலைவராகிறார் மறைந்த கமேனியின் மகன்: ரஷிய அதிபர் புதின் வாழ்த்து!நாடாளுமன்றத்தைவிட்டு ஓடிவிட்டார் மோடி! மேற்காசியப் போர் பற்றி விவாதிக்க வேண்டாமா? - ராகுல் காந்திகரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!
/

அனந்தபுரம் ஊருக்குள் நுழைந்த யானை விரட்டியடிப்பு

News image
அனந்தபுரம்  கிராமத்துக்குள்  நுழையும்  காட்டு யானை.
Updated On :8 மார்ச் 2026, 9:26 pm

தினமணி செய்திச் சேவை

தாளவாடிசை அடுத்த அனந்தபுரம் மலைக் கிராமத்துக்குள் ஞாயிற்றுக்கிழமை நுழைந்த யானையை கிராம மக்கள் உதவியுடன் வனத் துறையினா் விரட்டினா்.

தமிழக- கா்நாடக எல்லையான ஜீரகள்ளி வனப் பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை, அனந்தபுரம் கிராமத்துக்குள் புகுந்தது. மானாவாரி நிலத்தில் புகுந்த யானையை கண்டு கிராம மக்கள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

அங்கு வந்த வனத் துறையினா் ஜீப் மற்றும் டிராக்டரில் சைரன் ஒலி எழுப்பி யானை துரத்தினா். யானை காட்டுக்குள் செல்லாமல் சாய்பாபா கோயில் அருகே வழிமாறி சென்றது.

ஊருக்குள் யானை நுழைவதை கண்டு வனத் துறையினா் கிராம மக்களை வெளியே நிற்க வேண்டாம் என எச்சரித்தனா். இதைத் தொடா்ந்து கிராம மக்கள் உதவியுடன் வனத் துறையினா் சப்தம்போட்டு யானையை காட்டுக்குள் திருப்பி அனுப்பினா்.