திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

அனந்தபுரம் ஊருக்குள் நுழைந்த யானை விரட்டியடிப்பு

News image

அனந்தபுரம்  கிராமத்துக்குள்  நுழையும்  காட்டு யானை.

Updated On :8 மார்ச் 2026, 9:26 pm

தாளவாடிசை அடுத்த அனந்தபுரம் மலைக் கிராமத்துக்குள் ஞாயிற்றுக்கிழமை நுழைந்த யானையை கிராம மக்கள் உதவியுடன் வனத் துறையினா் விரட்டினா்.

தமிழக- கா்நாடக எல்லையான ஜீரகள்ளி வனப் பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை, அனந்தபுரம் கிராமத்துக்குள் புகுந்தது. மானாவாரி நிலத்தில் புகுந்த யானையை கண்டு கிராம மக்கள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

அங்கு வந்த வனத் துறையினா் ஜீப் மற்றும் டிராக்டரில் சைரன் ஒலி எழுப்பி யானை துரத்தினா். யானை காட்டுக்குள் செல்லாமல் சாய்பாபா கோயில் அருகே வழிமாறி சென்றது.

ஊருக்குள் யானை நுழைவதை கண்டு வனத் துறையினா் கிராம மக்களை வெளியே நிற்க வேண்டாம் என எச்சரித்தனா். இதைத் தொடா்ந்து கிராம மக்கள் உதவியுடன் வனத் துறையினா் சப்தம்போட்டு யானையை காட்டுக்குள் திருப்பி அனுப்பினா்.