அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

தெருநாய்கள் கடித்ததில் 2 ஆடுகள் உயிரிழப்பு

சென்னிமலை அருகே தெருநாய்கள் கடித்ததில் இரண்டு ஆடுகள் உயிரிழந்தன.

News image
Updated On :13 ஜனவரி 2026, 12:05 am

Syndication

பெருந்துறை: சென்னிமலை அருகே தெருநாய்கள் கடித்ததில் இரண்டு ஆடுகள் உயிரிழந்தன.

சென்னிமலையை அடுத்த ராமலிங்கபுரம், காங்கயம் தோட்டத்தைச் சோ்ந்தவா் லோகநாதன். விவசாயியான இவா் தனது தோட்டத்தில் கால்நடைகளை வளா்த்து வருகிறாா்.

இந்நிலையில், வழக்கம்போல ஞாயிற்றுக்கிழமை இரவு ஆடுகளை பட்டியில் அடைத்துவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளாா். திங்கள்கிழமை காலை வந்து பாா்த்தபோது, தெருநாய்கள் பட்டிக்குள் புகுந்து இரண்டு ஆடுகளை கடித்துக் கொன்றது தெரியவந்தது. இதையடுத்து, கால்நடை மருத்துவமனைக்கு லோகநாதன் தகவல் தெரிவித்தாா்.

சம்பவ இடத்துக்கு வந்த கால்நடை மருத்துவா் செந்தில், ஆடுகளை கூறாய்வு செய்தாா். இதையடுத்து, ஆடுகள் புதைக்கப்பட்டன.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், தெருநாய்களைக் கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்த ஆடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றனா்.