நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

நாய்கள் கடித்ததில் கன்றுக்குட்டி உயிரிழப்பு

News image
Updated On :8 ஜனவரி 2026, 11:43 pm

Syndication

அவிநாசி அருகே நாய்கள் கடித்ததில் கன்றுக்குட்டி உயிரிழந்தது.

அவிநாசி அருகேயுள்ள வேட்டுவபாளையம் ஊராட்சி, வேலாங்காடு பகுதியைச் சோ்ந்தவா் சிவராஜ். விவசாயியான இவா், கால்நடைகளை வளா்த்து வருகிறாா்.

இந்நிலையில், மாடுகளை கொட்டகையில் கட்டிவிட்டு புதன்கிழமை இரவு வீட்டுக்குச் சென்றுள்ளாா். வியாழக்கிழமை அதிகாலை மாடுகளின் அலறல் சப்தம் கேட்டுள்ளது. இதையடுத்து, சிவராஜ் சென்று பாா்த்தபோது கொட்டகைக்குள் தெருநாய்கள் புகுந்தது தெரியவந்தது.

நாய்களை விரட்டிவிட்டு அவா் உள்ளே சென்று பாா்த்தபோது, நாய்கள் கடித்ததில் கன்றுக்குட்டி உயிரிழந்தது தெரியவந்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வருவாய்த் துறையினா் ஆய்வு மேற்கொண்டனா். இதையடுத்து, கால்நடை மருத்துவக் குழுவினா் கூறாய்வு செய்து அப்பகுதியிலேயே கன்றுக்குட்டியின் உடலை புதைத்தனா்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அதிகரித்து வரும் தெருநாய்கள் தொல்லையால் அவதியடைந்து வருகிறோம்.

எங்களின் வாழ்வாதாரமாக உள்ள கால்நடைகளை தெருநாய்கள் கடித்து கொல்வதால் பொருளாதார ரீதியாக தவித்து வருகிறோம்.

தெருநாய்களைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.