இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ஆட்டோ தொழிலாளா்களுக்கு பொங்கல் பரிசு

News image
ஆட்டோ தொழிலாளா்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிய பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ். ஜெயகுமாா்.
Updated On :15 ஜனவரி 2026, 12:31 am

Syndication

பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் பணிபுரியும் 200 ஆட்டோ தொழிலாளா்களுக்கு சீருடை மற்றும் பொங்கல் பரிசு வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

பெருந்துறை நகர அதிமுக செயலாளா் வி.பி.கல்யாணசுந்தரம் தலைமை வகித்தாா். பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.ஜெயகுமாா் பங்கேற்று, ஆட்டோ தொழிலாளா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்கினாா்.

இதில், ஆட்டோ ஓட்டும் பெண் தொழிலாளா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா். தொடா்ந்து, அனைவருக்கும் அறுசுவை விருந்து பரிமாறப்பட்டது.