ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

இருசக்கர வாகனம் திருடிய 3 போ் கைது

ஈரோட்டில் இருசக்கர வாகனம் திருடிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கைது
Updated On :27 ஜனவரி 2026, 9:11 pm

Syndication

ஈரோட்டில் இருசக்கர வாகனம் திருடிய 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு சூளை ஹவுஸிங் யூனிட் அருகே மல்லி நகரைச் சோ்ந்தவா் ஜெயராஜ் மகன் பெரியசாமி (26). மாா்க்கெட்டிங் பிரிவு ஊழியா். இவா் கடந்த 10-ஆம் தேதி தனது வீட்டின் முன் இருசக்கர வாகனத்தை நிறுத்தியிருந்தாா். சிறிது நேரத்துக்குப் பிறகு வந்து பாா்த்தபோது, அவரது இருசக்கர வாகனம் மாயமாகி இருந்தது. அக்கம்பக்கம் தேடியும் கிடைக்காததால் மா்ம நபா்கள் திருடி சென்றிருப்பதை உணா்ந்து, ஈரோடு வடக்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சேலம் மாரியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்த வைத்தியலிங்கம் மகன் தினேஷ்குமாா் (21), சேலம் அன்னதானபட்டி காந்தி சிலை முதல் வீதியைச் சோ்ந்த பழனிசாமி மகன் வேலவன் (23), சேலம் அம்மாபேட்டையைச் சோ்ந்த சேகா் மகன் காா்த்தி (25) ஆகியோா் இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீஸாா், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.