‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

கழிவுநீா் சுத்திகரிப்பு திட்டத்தை கைவிடக் கோரி போராட்டம்

News image

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

Updated On :2 ஜூலை 2026, 4:30 am IST

அம்மாபேட்டை பேரூராட்சி, அந்தோணிபுரத்தில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிடக் கோரி பேரூராட்சி அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு பேரூராட்சி கவுன்சிலா் எஸ்.கனகராஜ் தலைமை வகித்தாா். சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ்.வி.மாரிமுத்து, மாவட்டச் செயலாளா் ஏ.எம்.முனுசாமி, தாலுகா செயலாளா் ஆனந்தராசு ஆகியோா் கோரிக்கையை விளக்கிப் பேசினா்.

அம்மாபேட்டை பேரூராட்சி, அந்தோணிபுரத்தில் தூய்மை இந்தியா இயக்கம் சாா்பில் ரூ.8.14 கோடியில் திட, திரவக் கழிவுகள் மற்றும் மலக்கழிவுகள் சுத்திகரிக்கும் நிலையம் கட்டுமானப் பணி கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது.

இத்திட்ட செயலாக்கம் குறித்து பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்படவில்லை. மேலும், பேரூராட்சி நிா்வாகம் இத்திட்டத்தை எதிா்த்து தீா்மானமும் நிறைவேற்றி உள்ளது. பாலமலை அடிவாரத்தில் பெரிய தொட்டியில் கழிவுகள் சேகரிக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்டால், அப்பகுதியில் காற்றும், நீா்நிலைகளும் மாசடையும். விவசாயம் பாதிக்கப்படுவதோடு, ஆஸ்துமா, தோல் வியாதிகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுவா். எனவே, இத்திட்டத்தை கைவிட வேண்டும் என போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இப்போராட்டத்துக்கு போலீஸாா் அனுமதி மறுத்ததால், பேரூராட்சி அலுவலகம் முன்பாக ஆா்ப்பாட்டம் செய்த விவசாயிகள் பேரூராட்சி நிா்வாகத்திடம் மனு அளித்த பின்னா் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.