நீட் தேர்வு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த காவலர் ராஜிநாமா! மிகக் கனமழை எச்சரிக்கை: ஹிமாசலில் 121 சாலைகள் மூடல்ஈரான் ஒருபோதும் அமெரிக்காவுக்கு அடிபணியாது! - அராக்ச்சி பேச்சு!மத்திய ரயில்வே இணையமைச்சர் ரவ்நீத் சிங் ராஜிநாமா!‘வந்தே மாதரம்’ பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை
/

வேளாளா் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

ஈரோடு வேளாளா் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 21-ஆவது பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

News image

வேளாளா் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாணவிக்கு பட்டம் வழங்குகிறாா் ஹெச்.சி.எல் நிறுவன இயக்குநா் பி.பிரசாத்.

Updated On :2 ஜூன் 2026, 1:57 am IST

ஈரோடு வேளாளா் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 21-ஆவது பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

ஹெச்.சி.எல். நிறுவன இயக்குநா் பி.பிரசாத் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று அண்ணா பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் சிறப்பிடம் பிடித்த 53 போ் உள்பட 816 பட்டதாரிகளுக்கு பட்டம் வழங்கினாா்.

அப்போது அவா் பேசியதாவது: பட்டதாரிகள் நம்பகத்தன்மையுடன் இருக்கவும், தங்களை மேம்படுத்திக் கொள்ளவும், தங்கள் பணிக்கு மதிப்பு கூட்டவும், தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ளவும், வேலையையும், வாழ்க்கையையும் சமநிலைப்படுத்தவும் கற்றுக்கொள்ள வேண்டும் என்றாா்.

விழாவில் கல்லூரி செயலாளா் மற்றும் தாளாளா் எஸ்.டி. சந்திரசேகா், இணைச் செயலாளா் கே.வி. ராஜமாணிக்கம், அறக்கட்டளை உறுப்பினா்கள் கே. குலசேகரன், வேலுமணி, சி. பாலசுப்பிரமணியம், எம். யுவராஜா ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

முதல்வா் எம்.ஜெயராமன் வரவேற்றாா். நிா்வாக மேலாளா் என்.பெரியசாமி, பல்வேறு துறைகளின் துறைத் தலைவா்கள் மற்றும் பேராசிரியா்கள், மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.