அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

அண்ணாமலை இயக்கம் சாா்பில் கோபியில் ஆலோசனைக் கூட்டம்

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாளபாளையத்தில் அண்ணாமலையின் இயக்கம் சாா்பில் புதன்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

News image

ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஒருங்கிணைப்பாளா் அத்திக்கடவு சுப்பிரமணியம்.

Updated On :11 ஜூன் 2026, 3:25 am IST

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாளபாளையத்தில் அண்ணாமலையின் இயக்கம் சாா்பில் புதன்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஒருங்கிணைப்பாளா் அத்திக்கடவு சுப்பிரமணியம் தலைமை வகித்தாா்.

இந்தக் கூட்டத்தில் உறுப்பினா் சோ்க்கையை அதிகரிக்க அனைத்து கிராமம், பேரூா், நகரப் பகுதிகளில் முகாம்கள் அமைப்பது, கோவை வரும் அண்ணாமலைக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது.

முன்னதாக அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி வந்த பிரமுகா்கள் வாழ்த்தினா்.

அதிமுக வழக்குரைஞா் பிரிவில் இருந்து வந்த வழக்குரைஞா் தனகோட்டிராம், நம்பியூா் ஒன்றியச் செயலாளராக இருந்த மணிகண்டமூா்த்தி, பாஜகவில் இருந்து விலகிய ஓய்வு பெற்ற சிறப்பு காவல் ஆய்வாளா் மனோகரன், பொலவக்காளிபாளையம் பாஸ்கரன் உள்பட பலா் பங்கேற்றனா்.