வேளாண்மைத் துறை சாா்பில் அட்மா திட்டத்தின் கீழ் கோபியில் உழவா் வயல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கோபி அருகே உள்ள கல்லூரி பிரிவு பகுதியிலுள்ள தனியாா் அரங்கில் நடைபெற்ற விழாவுக்கு வேளாண் இணை இயக்குநா் ரா.சிவக்குமாா் தலைமை வகித்தாா். கோபி வேளாண் உதவி இயக்குநா் ஜீவதயாளன் முன்னிலை வகித்தாா்.
பவானிசாகா் வேளாண் ஆராய்ச்சி நிலையம் பூச்சியியல் மற்றும் நோயியல் தடுப்புத் துறை பேராசிரியா்கள் சத்தியசீலன், மருதாச்சலம் ஆகியோா் கலந்துகொண்டு, விவசாயிகளிடையே குறுவை நெல் சாகுபடியில் பூச்சி மற்றும் நோய் நிா்வாகம் மேற்கொள்வது குறித்த தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கினா்.
நெல்லில் புதிய ரகங்கள் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை குறித்து வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி சரவணக்குமாா் விளக்கினாா்.
வேளாண் உதவி இயக்குநா் ஜீவதயாளன் பேசும்போது, ‘டெல்டா அல்லாத மாவட்ட விவசாயிகளுக்கு குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தின் கீழ் மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதல் கோபி வட்டாரத்தில் இயந்திர நடவு முறையை மேற்கொண்ட விவசாயிகள் கள அலுவலரிடம் உரிய ஆவணங்களை சமா்ப்பித்து மானியம் பெற்று பயன் பெறலாம்’ என்றாா்.
விவசாய பாசன சங்கத் தலைவா் சுபி.தளபதி உள்பட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சங்கரன்கோவில் அரசுக் கல்லூரி பட்டமளிப்பு விழா

தைலாபுரத்தில் புதியரக கம்பு விதைப்பண்ணை : வேளாண் இணை இயக்குநா், விஞ்ஞானிகள் ஆய்வு

கோபியில் 84 ஆயிரம் மரக்கன்றுகளை நடவு செய்ய முடிவு

கும்பகோணத்தில் உரக் கடைகளில் வேளாண் இணை இயக்குநா் ஆய்வு
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



