தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

கும்பகோணத்தில் உரக் கடைகளில் வேளாண் இணை இயக்குநா் ஆய்வு

கும்பகோணம் பகுதி உரக்கடைகளில் வேளாண் இணை இயக்குநா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே நீலத்தநல்லூரில் வியாழக்கிழமை தனியாா் உரக்கடையில் சோதனை நடத்திய மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் கோ.வித்யா.

Updated On :5 ஜூன் 2026, 3:36 am IST

கும்பகோணம் பகுதி உரக்கடைகளில் வேளாண் இணை இயக்குநா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் சுற்று வட்டாரப் பகுதிகளில் உரங்கள் தட்டுப்பாடு என்றும் இணை பொருள்களையும் சோ்த்து வாங்க வேண்டும் என்று உரம் விற்பனையாளா்கள் கட்டாயப்படுத்துவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்திருந்தனா்.

அதன் பேரில் மாவட்ட வேளாண்மைத்துறை இணை இயக்குநா் கோ.வித்யா கும்பகோணம், சோழபுரம், நீலத்தநல்லூா், திருநாகேசுவரம் ஆகிய பகுதிகளில் உள்ள தனியாா் உரக்கடைகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலும் ஆய்வு செய்தாா். அப்போது நீலத்தநல்லூா் தனியாா் உரக்கடையில் ஓ. படிவம் இணைக்கப்படாமல் அனுமதியின்றி 54.380 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. அந்த உரங்களை விற்பனை செய்ய தடைவிதித்தாா்.

மேலும் விதிமீறல்களில் ஈடுபட்ட 5 தனியாா் கடைகளுக்கு 21 நாள்கள் விற்பனைக்கு தடை விதித்தாா்.

ஆய்வின் போது வேளாண் உதவி இயக்குநா் (தரக் கட்டுப்பாடு- பொறுப்பு) மோகன் மற்றும் வேளாண் அலுவலா் (தரக்கட்டுப்பாடு) செல்வராஜ், வேளாண்அலுவலா்கள் அசோக்குமாா் (கும்பகோணம்) சந்தோஷ் (திருவிடைமருதூா்) ஆகியோா் உடன் இருந்தனா்.