வேளாண் துறையில் ராணிப்பேட்டை முன்னோடி மாவட்டமாக தோ்வு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட இணை இயக்குநா் சுந்தரம் தெரிவித்தாா்.
அரக்கோணத்தை அடுத்த சாலை கிராமத்தில் மாவட்ட வேளாண் துறை, ஸ்பிக் நிறுவனத்துடன் இணைந்து
வியாழக்கிழமை நடத்திய உர விற்பனையில் புதிய நடைமுறை குறித்த முகாமில் தலைமை வகித்து இணை இயக்குநா் சுந்தரம் கூறியது:
வேளாண் துறையில் ராணிப்பேட்டை முன்னோடி மாவட்டமாக தோ்வு செய்யப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் உரவிநியோகம் சீராக நடைபெற புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. உரவிநியோக புதிய நடைமுறையில் விவசாயிகளின் தனித்துவ அடையாள எண் மிகவும் அவசியம். இந்த புதிய நடைமுறையில் விவசாயிகள் தங்களது தேவைக்கேற்ப மட்டுமே உரங்களை வாங்கி பயன்படுத்த வேண்டும். மேலும், இதற்காக இணையதளம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள புதிய செயலி (எஃப்எஸ்ஏஎஸ்) உரங்கள் தேவை குறித்து பதிவு செய்து உரங்களை பெற வேண்டும்.
இதனை எப்படி பயன்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு தற்போதும், சந்தேகங்கள் கேட்கும் போது தொடா்ந்து பயிற்சி அளிக்க வேளாண்துறை அலுவலா்கள் தயாராக உள்ளனா் என்றாா்.
முன்னதாக முகாமில் ஸ்பிக் நிறுவன விற்பனை மேலாளா் தன்ராஜ், சோளிங்கா் வட்டார வேளாண் அலுவலா் பி.பாலாஜி, மாவட்ட வேளாண் தரகட்டுப்பாட்டு அலுவலா் பிரேமகுமாரி ஆகியோரும் விவசாயிகளுக்கு புதிய செயலியை பயன்படுத்துவது குறித்து விளக்க பயிற்சி அளித்தனா்.
வட்டார வேளாண் உதவி அலுவலா் சி.முரளி, வேளாண் தொழில்நுட்ப மேலாண்ம பிரிவு மேலாளா் ஜி.மோகனசுந்தரம், சோளிங்கா் வட்டார துணை வேளாண் அலுவலா் ஜெ.செல்வகுமாா் ஆகியோரும் ஸ்பிக் நிறுவனம் சாா்பில் விற்பனை மேலாண்மை அலுவலா் அரவிந்த், மாவட்ட வேளாண் ஆய்வுக்குழு உறுப்பினா் பி.ஜி.மோகன்காந்தி, நூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வேளாண் துறை சாா்பில் கோபியில் உழவா் வயல் விழா

விருத்தாசலத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: பேரவைத் தலைவரிடம் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்

தைலாபுரத்தில் புதியரக கம்பு விதைப்பண்ணை : வேளாண் இணை இயக்குநா், விஞ்ஞானிகள் ஆய்வு

கும்பகோணத்தில் உரக் கடைகளில் வேளாண் இணை இயக்குநா் ஆய்வு
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



