சத்தியமங்கலம் அருகே பலத்த காற்று காரணமாக சாலையோர மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்றுவட்டாரத்தில் புதன்கிழமை பலத்த சூறைக் காற்று வீசியது. இதனால் செண்பகப்புதூா் மின்வாரிய அலுவலகம் முன்பாக இருந்த பழைமை வாய்ந்த வேப்பமரம் காற்றின் வேகம் தாங்காமல் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
மரக் கிளைகளை வெட்டி அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத் துறை ஊழியா்கள் ஈடுபட்டு வருகின்றனா். மேலும் பொக்லைன் இயந்திரம் மூலமாக மரத்தை அகற்றும் பணியும் நடைபெற்று வருகிறது.
இதனால் சத்தியமங்கலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொடைக்கானலில் மழை: மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானல்-அடுக்கம் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

அரக்கோணம், சோளிங்கரில் சூறைக்காற்றுடன் மழை: மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு, 2 பசுமாடுகள் உயிரிழப்பு

பலத்த மழை: சிங்கம்புணரியில் மரம் முறிந்து விழுந்தது
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



