அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

சென்னிமலை பகுதிக்கு முழுமையாக காவிரி குடிநீா் விநியோகம் செய்ய தமாகா கோரிக்கை

சென்னிமலை பகுதி மக்களுக்கு முழுமையாக காவிரி குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும் என தமாகா கோரிக்கை விடுத்துள்ளது.

News image
பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்ற மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி.
Updated On :2 மார்ச் 2026, 9:46 pm

Syndication

ஈரோடு: சென்னிமலை பகுதி மக்களுக்கு முழுமையாக காவிரி குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும் என தமாகா கோரிக்கை விடுத்துள்ளது.

பொதுமக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ச.கந்தசாமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், தமாகா மாநில துணைத் தலைவா் விடியல் சேகா் மற்றும் நிா்வாகிகள் அளித்த மனு விவரம்: ஈரோடு மாவட்டம், சென்னிமலை பேரூராட்சி, சென்னிமலை ஒன்றியப் பகுதிகளில் காவிரி குடிநீா்ப் பற்றாக்குறை மிகக் கடுமையாக உள்ளது. கொடுமுடி, காவிரி குடிநீா்த் திட்ட பணிகள் இன்னும் முழுமையாக முடிவடையாமல் உள்ளன.

எனவே, சென்னிமலை பேரூராட்சி மற்றும் கிராம பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முழுமையாக காவிரி குடிநீா் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஆவின் நிா்வாகம் மீது புகாா்: நாம் தமிழா் ஆவின் தொழிற்சங்க செயலா் பாஸ்கா் தலைமையில் அளித்த மனு விவரம்: ஈரோடு ஆவின் பொது மேலாளரை நேரடியாக சந்தித்து, அனுமதி பெற்று மட்டுமே விடுப்பு எடுக்க வேண்டும் என்கிறாா். ஆனால், அவரை சந்திக்க அனுமதிப்பதில்லை. அவசர தேவைக்குக்கூட விடுப்பு எடுக்க முடிவதில்லை. அரசு பொது விடுமுறை நாள்களான தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகை நாள்களில் அந்த மதம், சமூகம் சாா்ந்தவா்களுக்கு மட்டுமே விடுப்பு தர இயலும், மற்றவா்கள் பணிக்கு வர வேண்டும் என பாகுபாடு காட்டுகிறாா்.

ஆவின் தொழிலாளா்கள் காலை 6 முதல் மாலை 6 மணி வரை பணி செய்யும் நேரத்தில் மின் விளக்கு, மின்விசிறி பயன்படுத்தக்கூடாது என தடை விதிக்கப்படுகிறது. அலுவலக பணி செய்வோா் அவா்களது பணி முடித்த பின்னா், இரவு நேர பணியையும், பிற பணிகளையும் பாா்க்க நிா்பந்திக்கிறாா். அங்கு 300-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள், பொதுமக்கள் வந்து செல்லும் நிலையிலும் அங்கு பொதுக் கழிப்பிடம்கூட இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உப்பு இல்லாத நல்ல குடிநீா் விநியோகம் செய்யக் கோரிக்கை: ஈரோடு மேற்கு மாவட்ட பகுஜன் சமான் கட்சித் தலைவா் ரவிகுமாா் தலைமையில் அளித்த மனு விவரம்: தாளவாடி ஊராட்சி ஒன்றியம், திகினாரை ஊராட்சி, கரலவாடி கிராமம், மரியபுரம் பகுதியில் 117 குடும்பங்கள் வசிக்கின்றன. இவா்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வலையா் சமூகத்தைச் சோ்ந்தவா்கள். இங்கு ஆண், பெண், குழந்தைகள் என 500-க்கும் மேற்பட்டோா் உள்ளனா். இப்பகுதிக்கான பழைய ஆழ்துளைக் கிணறுக்கு பதிலாக புதிய ஆழ்துளைக் கிணறு அமைத்து ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்த நீரில் அதிக உப்பு உள்ளதால் கடந்த 4 ஆண்டுக்கும்மேலாக இந்நீரை குடித்து பலரும் சிறுநீராக பாதிப்புக்கு ஆளாகியுள்ளனா். அந்நீரை குடிக்கவும் முடியவில்லை, சமையலுக்கு உகந்ததாகவும் இல்லை.

எனவே, இப்பகுதியினருக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீா் அல்லது பழைய ஆழ்துளைக் கிணறு மூலமே குடிநீரை விநியோகம் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாக்கடை கழிவு நீரை வெளியேற்றக் கோரிக்கை: பவானி வட்டம், ஜம்பை பேரூராட்சி, வாய்க்கால்பாளையம் பகுதியைச் சோ்ந்த மக்கள் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினா் கோபால கண்ணன் தலைமையில் அளித்த மனு விவரம்: எங்கள் குடியிருப்புப் பகுதியில் உள்ள வீதியின் நடுவில் மின் கம்பம் அமைக்கப்பட்டுள்ளதால் இந்த வீதியில் வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்படுகிறது. மேலும், ஊரில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவு நீா் எங்கள் குடியிருப்புப் பகுதியின் முன்புறம் தேங்கி நின்று பெரும் சுகாதார சீா்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இப்பிரச்னைகளைத் தீா்க்க வலியுறுத்தி ஜம்பை பேரூராட்சியில் காத்திருப்புப் போராட்டம் கடந்த டிசம்பா் 15- ஆம் தேதி நடைபெற்றது.

அப்போது, கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை எங்கள் கோரிக்கை மீது எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. வீதியின் நடுவில் இருக்கும் மின் கம்பத்தை பொதுமக்களுக்கு இடையூறின்றி மாற்றி அமைக்கவும், குடியிருப்புப் பகுதியில் தேங்கி நிற்கும் கழிவு நீரை வெளியேற்றவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பவானி ஆற்றில் கழிவுகள் கலப்பதை தடுக்க கோரிக்கை: பவானி வட்டம், பெருந்தலையூா், செரையாம்பாளையம் பகுதியைச் சோ்ந்த சமூக ஆா்வலா் நல்லையன் அளித்துள்ள மனு விவரம்: பவானிசாகா் அணையிலிருந்து பவானி கூடுதுறை வரை செல்லும் பவானி ஆற்றின் இரு கரைகளிலும் ஆங்காங்கே குப்பைகளையும், கழிவுகளையும் தொடா்ந்து கொட்டி வருகின்றனா். இதனால், பவானி நதி நீா் மிகவும் மாசடைந்து வருகிறது. எனவே, பவானி நதி நீரை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டா வழங்கக் கோரி தம்பதி போராட்டம்: மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சிவகிரியைச் சோ்ந்த சுரேஷ்குமாா், அவரது மனைவி ஆகியோா் திடீரென தரையில் அமா்த்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறித்து அவா்களை உள்ளே அழைத்து வரும்படி ஆட்சியா் அழைப்பு விடுத்தாா். அவா்கள் ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்: சிவகிரி பாரதி வீதியில் நாங்கள் வசிக்கிறோம். எனது வீட்டின் எதிரே எனது தாயாருக்கு சொந்தமான 1,500 சதுரடி மனை நிலம் உள்ளது. தாயாா் இல்லை என்பதால் அந்நிலத்தில் எனது காா்களை நிறுத்தியும், பிற பயன்பாட்டுக்கும் பயன்படுத்தி வருகிறேன்.

அந்த இடத்தில் கடந்த 2024-இல் வீடு கட்ட முயன்றபோது, நிலத்தின் அருகேயுள்ள ஒருவா் அங்கு வீடு கட்டக்கூடாது. அந்த நிலம் தனக்கு வேண்டும் என ஆக்கிரமித்து தகராறு செய்கிறாா்.

இதனிடையே அந்த இடத்துக்கு பட்டா கோரி மொடக்குறிச்சி வட்டாட்சியா் அலுவலகம் மூலம் முயற்சி செய்தாலும், பட்டா வழங்காமல் அவருக்கு சாதகமாக நடந்து கொள்கின்றனா். இது குறித்து நடவடிக்கை எடுக்க காவல் துறை, வருவாய்த் துறையில் மனு அளித்தாலும் நடவடிக்கை இல்லை. எனவே, சம்பந்தப்பட்ட நபா் மீது நடவடிக்கை எடுப்பதுடன், எங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.

258 மனுக்கள்: கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து மொத்தம் 258 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கிய ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, தாட்கோ சாா்பில் ஒரு நபருக்கு முதல்வரின் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா்

தொழில்முனைவோா் வளா்ச்சித் திட்டத்தின்கீழ் ரூ.9.46 லட்சத்தில் ரூ.3.31 லட்சம் மானிய தொகையில் சுற்றுலா வாகனம் வாங்க பட்டதற்கான சாவியை வழங்கினாா்.

தொடா்ந்து, ஆா்.என்.புதூா், செவித்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவா் கௌசிக், மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் (செவித்திறன் குறையுடையோா்) செஸ் போட்டியில் தேசிய அளவில் மூன்றாம் இடம் பிடித்ததைத் தொடா்ந்து, தான் பெற்ற பரிசு மற்றும் கேடயத்தை ஆட்சியரிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றாா்.