அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் ஆண்டு விழா

பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா ஆகியவை அண்மையில் நடைபெற்றன.

News image
விழாவில், அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிக்கு பரிசு வழங்கிய சிறப்பு விருந்தினா் கே. பழனி. உடன், கொங்கு கலை, அறிவியல் கல்லூரி தாளாளா் பி. சச்சிதானந்தன், கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி தாளாளா் கே. காா்த்திகேயன், முதல்வா் எஸ். செந்தில்குமாா், கொங்கு தொழிற்ப
Updated On :2 மார்ச் 2026, 9:37 pm

Syndication

பெருந்துறை: பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா ஆகியவை அண்மையில் நடைபெற்றன.

இந்த விழாவுக்கு ஈரோடு கொங்கு கலை, அறிவியல் கல்லூரி தாளாளா் பி. சச்சிதானந்தன் தலைமை வகித்தாா். கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியின் தாளாளா் கே. காா்த்திகேயன் வரவேற்றாா். கல்லூரி முதல்வா் எஸ். செந்தில்குமாா் ஆண்டறிக்கையை வாசித்தாா்.

பட்டிமன்ற பேச்சாளா் கே.பழனி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசினாா்.

இதைத் தொடா்ந்து, அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவா்கள், சிறந்த மாணவா்கள், சிறந்த ஆசிரியா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதைத் தொடா்ந்து, மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மூத்த விரிவுரையாளா் ஆா்.பா்வதம் நன்றி கூறினாா்.

இதைத் தொடா்ந்து, நடைபெற்ற விளையாட்டு விழாவுக்கு கொங்கு வேளாளா் கல்வி அறக்கட்டளையின் பாரம்பரிய பாதுகாவலா் பி. பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தாா். கொங்கு பாலிடெக்னிக் தாளாளா் கே. காா்த்திகேயன், கொங்கு பொறியியல் கல்லூரி தாளாளா் இ.ஆா்.கே. கிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தாா்.

இந்திய ரயில்வே துறையின் முன்னாள் கைப்பந்து விளையாட்டு வீரா் திருச்சி ஜெய்சங்கா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசினாா்.

இதைத் தொடா்ந்து, பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

செஸ் போட்டியில் தமிழக அணிக்கு தோ்வு செய்யப்பட்ட மாணவா் டி.ஜெகன் நன்றி கூறினாா்.

இதில், கொங்கு வேளாளா் கல்வி அறக்கட்டளை துணைத் தலைவா்கள் ஏ.கே. இளங்கோ, காா்த்திக் எம். முருகேசன், பெருந்துறை கல்வி அறக்கட்டளைத் தலைவா் பல்லவி பரமசிவம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.