மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் பணி நியமன ஆணை வழங்கும் விழா

News image
பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் மாணவனுக்கு பணி நியமன ஆணையை வழங்குகிறாா் கல்லூரி தாளாளா் காா்த்திகேயன். உடன், சிறப்பு அழைப்பாளா் திருநாவுக்கரசு உள்ளிட்டோா்.
Updated On :15 மார்ச் 2026, 8:56 pm

தினமணி செய்திச் சேவை

பெருந்துறை, கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் பணி நியமன ஆணை வழங்கும் விழா மற்றும் பிரிவு உபசார விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவுக்கு, கொங்கு வேளாளா் கல்வி அறக்கட்டளையின் பாரம்பரிய பாதுகாவலா் நரேஷ் சந்திரன் தலைமை வகித்தாா். கல்லூரித் தாளாளா் காா்த்திகேயன், கொங்கு வேளாளா் கல்வி அறக்கட்டளையின் பாரம்பரிய பாதுகாவலா் ஸ்ரீதா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முதல்வா் செந்தில்குமாா் வரவேற்றாா்.

விழாவில், சிறப்பு அழைப்பாளா் பெருந்துறை சக்தி ஆட்டோ காம்போனட் நிறுவனத்தின் தலைவா் திருநாவுக்கரசு கலந்து கொண்டு 153 மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினாா். விழாவில், மாநில அளவில் ஐஎஸ்டிஈ விருது பெற்ற மூன்றாம் ஆண்டு மாணவன் ஜெகன் மற்றும் மாணவி விஷ்ணுபிரியா ஆகியோருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டனா்.

மாநில அளவில் விளையாட்டுப் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்ற மூன்றாம் ஆண்டு மாணவா் சதீஷ்குமாருக்கு ரொக்க பணம் வழங்கப்பட்டது. மேலும், மாநில அளவில் விளையாட்டில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கு ரொக்க பணமும், சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டனா்.

இதில், வேலைவாய்ப்பு பெற்ற மாணவ, மாணவிகளின் பெற்றோா்கள், கொங்கு தொழிற் பயிற்சி நிலைய முதல்வா் தினேஷ்குமாா், துறைத் தலைவா்கள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். கெமிக்கல் துறை விரிவுரையாளா் சுதாகா் நன்றி கூறினாா். விழா ஏற்பாடுகளை கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலா் சென்னியப்பன் மற்றும் ஆட்டோமொபைல் துறை மூத்த விரிவுரையாளா் முருகேசன் ஆகியோா் செய்திருந்தனா்.