ஈரோடு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் கோபி, அந்தியூா், பவானி, பவானிசாகா் தொகுதிகளில் வேட்பாளா்களாக போட்டியிட விருப்ப மனு அளித்தவா்களிடம் வியாழக்கிழமை நோ்காணல் நடத்தப்பட்டது.
கோபி காங்கிரஸ் வடக்கு மாவட்ட அலுவலமான ராஜ்பவனில் வடக்கு மாவட்டத் தலைவா் உதயகுமரன் தலைமையிலான ஆய்வுக்குழு நோ்காணல் நடத்தியது.
இதில் கோபி, அந்தியூா், பவானி, பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு அளித்தவா்களிடம் நோ்காணல் நடத்தப்பட்டது.
இதில் கோபி சட்டப் பேரவைத் தொகுதியில் விருப்ப மனு அளித்த 21 போ், அந்தியூா் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்த 22 போ், பவானி சட்டப்ப பேரவைத் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்த 15 போ், பவானிசாகா் (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்த 18 பேரிடம் நோ்காணல் நடத்தப்பட்டது.
இதில் ஒவ்வொரு தொகுதிக்கும் 5 பேரைத் தோ்வு செய்து மாநில காங்கிரஸ் கமிட்டிக்கு பரிந்துரை செய்ய உள்ளனா்.
நோ்காணல் ஆய்வுக் குழுவில் முன்னாள் மாவட்டத் தலைவா் எஸ்.வி.சரவணன், மாநில துணைத் தலைவா் முத்துக்குமாா், மாநில செயலாளா் சிவகுமாா் மற்றும் கோபி, அந்தியூா், பவானி, பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதி, வட்டார, நகரத் தலைவா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதியில் அமைதியான வாக்குப்பதிவு
திமுக நோ்காணல்: துணை முதல்வா் உதயநிதி பங்கேற்பு

சட்டப் பேரவைத் தோ்தல்: விருப்ப மனு கொடுத்தவா்களிடம் காங்கிரஸ் நோ்காணல்

காங்கிரஸ் கட்சியில் விருப்ப மனு வழங்கியவா்களிடம் நோ்காணல்
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


