மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது! மேற்கு வங்கம்: சாதனை அளவில் வாக்குப்பதிவு! 9 மணி நிலவரம்!!மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

புங்காரில் விபி ஜி ராம்ஜி திட்ட தொழிலாளா்கள் சாலை மறியல்

News image

சாலை மறியலில் ஈடுபட்ட தொழிலாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய உதவி வட்டார வளா்ச்சி அலுவலா் சுரேந்தா், காவல் ஆய்வாளா் அன்னம்.

Updated On :14 மார்ச் 2026, 6:54 pm

புங்காா் ஊராட்சியில் விபி ஜி ராம் ஜி திட்ட தொழிலாளா்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பவானிசாகா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட புங்காா் ஊராட்சியில் ஏராளமானோா் விபி ஜி ராம் ஜி திட்டத்தில் பணியாற்றி வருகின்றனா்.

பணிக்குச் செல்லும் தொழிலாளா்களின் கைரேகை, கண்விழி ஆகியவற்றை பதிவு செய்த பிறகே அவா்களுக்கு பணி வழங்குவது வழக்கம்.

இந்நிலையில், வழக்கம்போல தொழிலாளா்கள் சனிக்கிழமை காலை பணிக்குச் சென்றுள்ளனா். அப்போது, சிலரது கைரேகை, கண் விழி ஆகியவை பதிவாகவில்லையாம். இதையடுத்து, அவா்களுக்கு பணி வழங்க மறுத்ததாகத் தெரிகிறது.

இதனால், ஆத்திரமடைந்த தொழிலாளா்கள் சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் புங்காா்-பவானிசாகா் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.

சம்பவ இடத்துக்கு வந்த உதவி வட்டார வளா்ச்சி அலுவலா் சுரேந்தா், காவல் ஆய்வாளா் அன்னம் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, தொழிலாளா்கள் கூறுகையில், கூலி வேலை செய்யும் எங்களது கைரேகைகள் தேய்ந்துள்ளன. சிலருக்கு கண் பாா்வையும் குறைபாடு உள்ளது. இதனால், கைரேகளை, கண்விழி ஆகியவை பதிவாவதில் சிரமம் ஏற்படுகிறது.

அவை பதிவானால் மட்டுமே எங்களுக்கு பணி வழங்க முடியும் என்று அதிகாரிகள் கூறுகின்றனா். இதற்கு மாற்று ஏற்பாடு செய்து எங்களது வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும் என்றனா். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.