தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!சி.வி. சண்முகம் அணி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!ஒரு தலித் முதல்வராகும் அளவுக்கு தமிழ்ச் சமூகம் இன்னும் தயாராகவில்லை! திருமாவளவன்ஐயூஎம்எல் தலைவரைச் சந்தித்து வாழ்த்து பெற்ற முதல்வர் விஜய்!பேரவைத் தலைவரை கரம்பிடித்து அமரவைக்கும் சம்பிரதாயம்! முதல்வர் விஜய் கூறிய குட்டிக்கதைஎல்பிஜி சிலிண்டர் மானியம் நிறுத்தப்படும்! குறுந்தகவல் சொல்வது என்ன?50 கார்களில் அணிவகுத்த பாஜகவின் சௌபாக்ய சிங் தாகூர்! இதுதான் சிக்கனமா?நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கத் தடை! உச்ச நீதிமன்றத்தில் தவெக எம்எல்ஏ மேல்முறையீடு! தவெகவுக்கு ஆதரவு! எம்.எல்.ஏ. காமராஜ் அமமுகவிலிருந்து நீக்கம்!நீட் தேர்வில் ஸ்கேம் இல்லை; நீட்டே ஒரு ஸ்கேம்தான்! - ஸ்டாலின்நீட் மறுதேர்வுக்கு கட்டணம் இல்லை! செலுத்திய கட்டணமும் திருப்பி அளிக்கப்படும்! மே 3-ல் நடைபெற்ற நீட் தேர்வு ரத்து!
/

ஓடும் ரயிலில் இருந்து இறங்கிய அரசு ஊழியரின் இரண்டு கால்களும் துண்டாயின

News image

கோப்புப் படம்

Updated On :3 மே 2026, 12:08 am IST

ஈரோட்டில் ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்று நடைமேடை மற்றும் ரயில் பெட்டிக்கு இடையே சிக்கிய அரசு ஊழியரின் இரண்டு கால்களும் துண்டாயின.

திருப்பூா் மாவட்டம், முத்தூரைச் சோ்ந்தவா் பழனிசாமி மகன் பாரதி (30). இவா் தமிழ் வளா்ச்சித் துறையில் அலுவலக உதவியாளராகப் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், சென்னையில் இருந்து ஈரோட்டுக்கு ரயிலில் வெள்ளிக்கிழமை பயணம் செய்துள்ளாா்.

ஈரோடு ரயில் நிலையம் வந்தடைந்ததும், ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்றுள்ளாா். அப்போது, கால் தவறி நடைமேடைக்கும், ரயில் பெட்டிக்கும் இடையே சிக்கினாா். இதில், பாரதியின் இரண்டு கால்களும் துண்டாயின.

வலியால் துடித்த அவரை ஈரோடு ரயில்வே போலீஸாா் மற்றும் பயணிகள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின் தீவிர சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இச்சம்பவம் குறித்து ஈரோடு ரயில்வே போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.