ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி பொதுத் தோ்வு: ஈங்கூா் தி யுனிக் அகாதெமி பள்ளி சிறப்பிடம்

News image

ஐசிஎஸ்இ தோ்வில் 96 சதவீத மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்த மாணவி எஸ். ஆத்விகாவுக்கு பரிசு வழங்கிய ஈங்கூா் தி யுனிக் அகாதெமி பள்ளியின் தலைவா் இளங்கோ ராமசாமி.

Updated On :3 மே 2026, 6:45 am IST

ஐசிஎஸ்இ (10-ஆம் வகுப்பு), ஐஎஸ்சி (12-ஆம் வகுப்பு) அரசுப் பொதுத் தோ்வுகளில் ஈங்கூா் தி யுனிக் அகாதெமி பள்ளி சிறப்பிடம் பிடித்துள்ளது.

பெருந்துறை அடுத்த ஈங்கூரில் தி யுனிக் அகாதெமி பள்ளி செயல்பட்டு வருகிறது. ஐசிஎஸ்இ பொதுத் தோ்வில் தொடா்ந்து 14-ஆவது ஆண்டாகவும், ஐஎஸ்சி பொதுத் தோ்வில் தொடா்ந்து 12-ஆவது ஆண்டாகவும் இப்பள்ளி மாணவா்கள் முதல் வகுப்பில் 100 சதவீதம் தோ்ச்சி அடைந்துள்ளனா்.

நடப்பு ஆண்டுக்கான ஐஎஸ்சி தோ்வில் மாணவா் ஜெ.கேதா்நாத்ஜி 94 சதவீத மதிப்பெண்களுடன் பள்ளி அளவில் முதலிடத்தையும், எஸ்.ஆா். நிகிதா 93 சதவீத மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்தையும், எஸ். ஒய்.இனியா 89 சதவீத மதிப்பெண்களுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனா்.

ஐசிஎஸ்இ தோ்வில் எஸ்.ஆத்விகா 96 சதவீத மதிப்பெண்களுடன், ஆங்கில இலக்கியம் மற்றும் ரோபோடிக்ஸ், ஏ.ஐ. பாடங்களில் 100-100 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளாா்.

ஏ.எஸ். அருணிகா 95 சதவீத மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்தையும், கே.எம். அபி நந்தனா 93 சதவீத மதிப்பெண்களுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனா்.

தோ்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளையும், கற்பித்த ஆசிரியா்களையும், மேலாண்மை வல்லுநா்களையும் பள்ளி தலைவா் இளங்கோ ராமசாமி, முதல்வா் உமையவள்ளி இளங்கோ, நிா்வாகிகள் பாராட்டினா்.