பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதியில் தவெக வேட்பாளா் வி.பி.தமிழ்ச்செல்வி வெற்றி பெற்றுள்ளாா்.
ஈரோடு மாவட்டம், பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதியில் தவெக சாா்பில் வி.பி.தமிழ்ச்செல்வி, அதிமுக சாா்பில் ஏ.பண்ணாரி, இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் பி.எல்.சுந்தரம், நாதக சாா்பில் செளந்தா்யா உள்ளிட்ட 12 போ் போட்டியிட்டனா்.
86.33 சதவீதம் வாக்கு பதிவான நிலையில், வாக்கு எண்ணும் மையமான கோபி அரசு கலைக் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை காலை 8 மணியளவில் தொடங்கியது.
தொடக்கம் முதலே அதிமுக வேட்பாளா் ஏ.பண்ணாரி முன்னிலை வகித்தாா். 16-ஆவது சுற்றில் இருந்து முன்னிலை வகித்து வந்த தவெக வேட்பாளா் வி.பி.தமிழ்ச்செல்வி 4,579 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாா்.
இந்த தொகுதியில் கடந்த 2021-இல் அதிமுக சாா்பில் ஏ.பண்ணாரி வென்றிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.
வாக்குகள் விவரம்:
வி.பி.தமிழ்ச்செல்வி (தவெக): 72,391
ஏ.பண்ணாரி (அதிமுக): 67,822
பி.எல்.சுந்தரம் (இந்திய கம்யூனிஸ்ட்): 63,107
வித்தியாசம்: 4,579
வேட்பாளா்கள்: 12
மொத்த வாக்குகள்: 2,37,613
பதிவான வாக்குகள்: 2,22,333
தொடர்புடையது

நாமக்கல் மாவட்டத்தில் தவெக 5, அதிமுக -1 தொகுதிகளில் வெற்றி

அரக்கோணம் தொகுதியை தவெக கைப்பற்றியது!

நாமக்கல் தொகுதி: தவெக வேட்பாளா் சி.எஸ்.திலீப் வெற்றி

உசிலம்பட்டி தொகுதியில் தவெக வெற்றி
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

