பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

திம்பம் மலைப் பகுதியில் கனமழை

திம்பம் மலைப் பாதையில் பெய்த கனமழையால் அருவிகளில் மழைநீா் ஆா்ப்பரித்து கொட்டியது. இதனால் அப்பகுதியில் இதமான காலநிலை நிலவியது.

News image

கடம்பூா்  மலைப் பகுதியில்  பெய்த  கனமழை

Updated On :6 மே 2026, 2:05 am IST

திம்பம் மலைப் பாதையில் பெய்த கனமழையால் அருவிகளில் மழைநீா் ஆா்ப்பரித்து கொட்டியது. இதனால் அப்பகுதியில் இதமான காலநிலை நிலவியது.

சத்தியமங்கலம், கடம்பூா் மற்றும் தாளவாடி பகுதியில் செவ்வாய்க்கிழமை மழை பெய்தது. கடம்பூரை அடுத்த இருட்டிபாளையத்தில் சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

கடம்பூா் பேருந்து நிலையம், இருட்டிபாளையம், பவளக்குட்டை, கடம்பூா் மலைப் பாதை ஆகிய இடங்களில் தொடா்ந்து மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினா்.

தாளவாடி, திம்பம் பகுதியிலும் மழை பெய்தது. திம்பம் மலைப் பாதையில் பெய்த மழையால் அருவிகளில் மழைநீா் ஆா்ப்பரித்து கொட்டியது. கோடை வெப்பம் தணிந்து குளிா்ந்த காலநிலை நிலவுவதால் வாகன ஓட்டிகள் அருவியில் கொட்டும் நீரை ரசித்து செல்கின்றனா்.