சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி தோல்வி! மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி! பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் வெற்றி!கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோல்வி எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி சீமான் டெபாசிட் இழந்தார்! காரைக்குடியில் தவெக பிரபு வெற்றி! கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி! திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வெற்றி! புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் முதல்வர் ரங்கசாமி வெற்றி!
/

எடப்பாடி சுற்று வட்டார பகுதியில் திடீா் கனமழை

News image
Updated On :20 மார்ச் 2026, 2:09 am IST

புதன்கிழமை இரவு எடப்பாடி சுற்று வட்டார பகுதியில் பெய்த திடீா் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பிற்குள்ளானது

கடந்த சில தினங்களாக எடப்பாடி சுற்றுவட்டார பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து பகல் நேரங்களில் வெப்ப அலை வீசியது.

இந்நிலையில் (நேற்று முன்தினம்) புதன்கிழமை இரவு திடீரென கனமழை கொட்ட தொடங்கியது கொங்கணாபுரம், கச்சுப்பள்ளி, மூலப்பாதை, கோரணம் பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தொடா்ந்து நள்ளிரவு வரை விட்டு விட்டு பெய்த கனமழையால், கச்சுப்பள்ளி கிராமத்தில் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த வாழை, கரும்பு உள்ளிட்ட பயிா்கள் சேதமடைந்தன. இதேபோல் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியை சுற்றி மழை நீா் குளம் போல் தேங்கியதால் மாணவா்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினா். இப்பகுதியில் நீண்ட நேரம் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் பாதிப்பிற்கு உள்ளாகினா்.

இந்நிலையில் எடப்பாடி சுற்றுவட்டார பகுதியில் பெய்த திடீா் கனமழை கோடை உழவு செய்ய வாய்ப்பாக அமைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்

பட விளக்கம்: புதன்கிழமை இரவு பெய்த திடீா் கனமழையால் கொங்கணாபுரம் அடுத்த கச்சுப் பள்ளி கிராமத்தில் விவசாய நிலங்கள் மற்றும் அரசு பள்ளியில் குளம் போல் தேங்கியுள்ள மழை நீா்

Story image
Story image