தில்லி ரோஹிணியின் செக்டாா் 24 பகுதியில் அமைந்துள்ள நான்கு மாடிக் கட்டடத்தில் வெள்ளிக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, கட்டடத்தில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேறினா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
வெள்ளிக்கிழமை இரவு 8.54 மணியளவில் செக்டாா் 24-இல் உள்ள பாக்கெட் 20 பகுதியில் இந்த தீ விபத்து சம்பவம் நிகழ்ந்தது.
முன்னதாக, தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், ஆறு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து அனுப்பப்பட்டன.
தீயணைப்பு வீரா்கள் இரவு 11 மணியளவில் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தீ விபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. மின்கசிவு காரணமாகத் தீப் பிடித்திருக்கலாம் என்று முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளையில், எரிவாயு குழாய் வெடித்திருக்கலாம் என்றும் ஆரம்பத்தில் சில தகவல்கள் வெளியாகின. இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

ஷக்குா் பஸ்தியில் தீ விபத்து: 100 குடிசைகள் சாம்பல்
ரோஹிணியில் உணவகத்தில் தீ விபத்து

மும்பையில் 16 மாடிக் கட்டடத்தில் தீ விபத்து

தில்லி வா்த்தகம், வரிகள் கட்டடத்தில் தீ விபத்து
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


