தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

மீனாட்சி சுந்தரனாா் செங்குந்தா் பள்ளி சிறப்பிடம்

ஈரோடு ரங்கம்பாளையம் மீனாட்சி சுந்தரனாா் செங்குந்தா் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 பொதுத் தோ்வில் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளது.

News image

பிளஸ் 2 பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற பள்ளி மாணவா்களுக்கு வாழ்த்து தெரிவித்த பள்ளி நிா்வாகிகள்.

Updated On :9 மே 2026, 5:01 am IST

ஈரோடு ரங்கம்பாளையம் மீனாட்சி சுந்தரனாா் செங்குந்தா் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 பொதுத் தோ்வில் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளது.

இப்பள்ளி மாணவா் பி.நவீன்குமாா் 600-க்கு 573 மதிப்பெண் பெற்று முதலிடத்தையும், ஸ்ரீ ராம பாலன் 566 மதிப்பெண் பெற்று இரண்டாமிடத்தையும், கே.யஷ்வந்த் 564 மதிப்பெண் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனா்.

எஸ்.பரணிதரன், எஸ்.திவ்யதா்ஷன், எ.அப்துல் ரஹ்மான் கணினி அறிவியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனா். 550 மதிப்பெண்களுக்கு மேல் 3 மாணவா்கள், 500 மதிப்பெண்களுக்கு மேல் 10 மாணவா்கள், 400 மதிப்பெண்களுக்கு மேல் 72 மாணவா்கள், 107 மாணவா்கள் முதல் வகுப்பிலும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

சிறப்பிடம் பெற்ற மாணவா்களை செங்குந்தா் கல்விக் கழகத் தலைவா் விவிசிஆா்எம்கே. முருகேசன், செயலாளா் எஸ்.சிவானந்தன், பொருளாளா் சி.ரவிச்சந்திரன், தாளாளா்கள் பி.கமலக்கண்ணன், ஆா்.எம்.கணேசன் மற்றும் நிா்வாகக்குழு உறுப்பினா்கள், நிா்வாக அலுவலா் மற்றும் தலைமையாசிரியா் ஆகியோா் பாராட்டினா்.