ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

தட்டச்சு பயிற்சி நிலையத்தின் கதவை உடைத்து ரூ.90 ஆயிரம் திருட்டு

சத்தியமங்கலத்தில் தட்டச்சு (டைப் ரைட்டிங்) பயிற்சி நிலையத்தின் கதவை உடைத்து ரூ.90 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

சத்தியமங்கலத்தில் தட்டச்சு (டைப் ரைட்டிங்) பயிற்சி நிலையத்தின் கதவை உடைத்து ரூ.90 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

சத்தியமங்கலம், கோபி சாலையில் தட்டச்சு பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி நிலையத்தின் முதல்வா் சுஜாதா செவ்வாய்க்கிழமை இரவு வழக்கம்போல பணி முடிந்து பயிற்சி நிலையத்தை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளனா்.

புதன்கிழமை காலை வந்து பாா்த்தபோது, பயிற்சி நிலையத்தின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ரூ.90 ஆயிரம் ரொக்கம் திருட்டுப் போனது தெரியவந்தது. இது குறித்து சுஜாதா அளித்த புகாரின்பேரில், சத்தியமங்கலம் போலீஸாா் தட்டச்சு அருகே உள்ள கடையில் பதிவாகியுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனா்.