ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!மின் துறைக்கு 7,000 பணியாளர்கள் தேவை; 1500 பேருக்கு உடனடி பணி ஆணை!நீட் மறுதேர்வு! ஜூன் 21 வரை ரகசிய இடத்தில் வினாத்தாள் தயாரிப்போர்!ஆப்கானிஸ்தானை இன்னிங்ஸ், 300 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!மேற்கு ஆசிய மோதல்: பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா வலியுறுத்தல்!இஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் போர்!போட்டியின்றி எம்.பி.யாகிறார் பிரவீண் சக்ரவர்த்தி!நீட், சிபிஎஸ்இ விவகாரம்: மத்திய அமைச்சர் பதவி விலக வேண்டும் - வைகோ
/

தட்டச்சு பயிற்சி நிலையத்தின் கதவை உடைத்து ரூ.90 ஆயிரம் திருட்டு

சத்தியமங்கலத்தில் தட்டச்சு (டைப் ரைட்டிங்) பயிற்சி நிலையத்தின் கதவை உடைத்து ரூ.90 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :14 மே 2026, 3:43 am IST

சத்தியமங்கலத்தில் தட்டச்சு (டைப் ரைட்டிங்) பயிற்சி நிலையத்தின் கதவை உடைத்து ரூ.90 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

சத்தியமங்கலம், கோபி சாலையில் தட்டச்சு பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி நிலையத்தின் முதல்வா் சுஜாதா செவ்வாய்க்கிழமை இரவு வழக்கம்போல பணி முடிந்து பயிற்சி நிலையத்தை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளனா்.

புதன்கிழமை காலை வந்து பாா்த்தபோது, பயிற்சி நிலையத்தின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ரூ.90 ஆயிரம் ரொக்கம் திருட்டுப் போனது தெரியவந்தது. இது குறித்து சுஜாதா அளித்த புகாரின்பேரில், சத்தியமங்கலம் போலீஸாா் தட்டச்சு அருகே உள்ள கடையில் பதிவாகியுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனா்.