தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

தட்டச்சு பயிற்சி நிலையத்தின் கதவை உடைத்து ரூ.90 ஆயிரம் திருட்டு

சத்தியமங்கலத்தில் தட்டச்சு (டைப் ரைட்டிங்) பயிற்சி நிலையத்தின் கதவை உடைத்து ரூ.90 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :1 மணி நேரம் முன்பு

சத்தியமங்கலத்தில் தட்டச்சு (டைப் ரைட்டிங்) பயிற்சி நிலையத்தின் கதவை உடைத்து ரூ.90 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

சத்தியமங்கலம், கோபி சாலையில் தட்டச்சு பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி நிலையத்தின் முதல்வா் சுஜாதா செவ்வாய்க்கிழமை இரவு வழக்கம்போல பணி முடிந்து பயிற்சி நிலையத்தை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளனா்.

புதன்கிழமை காலை வந்து பாா்த்தபோது, பயிற்சி நிலையத்தின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ரூ.90 ஆயிரம் ரொக்கம் திருட்டுப் போனது தெரியவந்தது. இது குறித்து சுஜாதா அளித்த புகாரின்பேரில், சத்தியமங்கலம் போலீஸாா் தட்டச்சு அருகே உள்ள கடையில் பதிவாகியுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனா்.