கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளதுகுதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

மதுக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம்

அம்மாபேட்டை அருகே செயல்பட்டு வரும் மதுக் கடையை நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

மதுக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Updated On :21 நிமிடங்கள் முன்பு

அம்மாபேட்டை அருகே செயல்பட்டு வரும் மதுக் கடையை நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அருகேயுள்ள குறிச்சி, வாய்க்கால்மேடு பகுதியில் செயல்பட்டு வரும் மதுக் கடையால் அப்பகுதி மக்கள் நாள்தோறும் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனா். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் மதுக் கடையை மூட வேண்டும் என தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இந்நிலையில், வாய்க்கால் மேடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்டோா் சம்பந்தப்பட்ட மதுக் கடையை முற்றுகையிட்டு திங்கள்கிழமை காலை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அம்மாபேட்டை போலீஸாா், வருவாய்த் துறையினா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, கோரிக்கை குறித்து உயா் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா். மதுக் கடை வழக்கம்போல திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்றது.