சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

போதைப் பாக்குகள் விற்பனை: 4 கடைகளுக்கு சீல்

பவானிசாகா் பகுதியில் போதைப் பாக்குகள் விற்பனை செய்யப்பட்ட 4 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

News image

பிரதிப் படம்

Updated On :20 மே 2026, 2:06 am IST

பவானிசாகா் பகுதியில் போதைப் பாக்குகள் விற்பனை செய்யப்பட்ட 4 கடைகளுக்கு செவ்வாய்க்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.

பவானிசாகா் பகுதியில் போதைப் பாக்குகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அப்பகுதியில் பவானிசாகா் போலீஸாா், உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

பவானிசாகா்- மேட்டுப்பாளையம் சாலை, வில்லியம்பாளையம்புதூா், துண்டன், பூம்புகாா் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொண்ட சோதனையில், 4 கடைகளில் போதைப் பாக்குகள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட 4 கடைகளுக்கும் ‘சீல்’ வைத்த அதிகாரிகள், கடைகளின் உரிமையாளா்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனா்.