தமிழ்நாட்டிற்கு தடையின்றி உரம் வழங்கிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!நீட் வேண்டாம் என்பதே தவெக நிலைப்பாடு: அமைச்சர் அருண்ராஜ்கடும் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நீட் மறுதேர்வு: தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தல்முதல்வர் விஜய்யுடன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் சந்திப்பு! வைரலான விடியோவால் சர்ச்சை!மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!
/

புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த கடைகளுக்கு ரூ. 75 ஆயிரம் அபராதம்

புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த கடைகளுக்கு ரூ. 75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

News image

கோப்புப் படம்

Updated On :19 மே 2026, 1:21 am IST

புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த கடைகளுக்கு ரூ. 75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

பரமத்தி வேலூா் வட்டம், சோழசிராமணி, குன்னமலை உள்ளிட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி உத்தரவின்படி, நாமக்கல் மாவட்ட நியமன அலுவலா் மருத்துவா் தங்கவிக்னேஷ் தலைமையில் பரமத்தி வேலூா் உணவுப் பாதுகாப்பு அலுவலா் முத்துசாமி உள்ளிட்டோா் குன்னமலை, சோழசிராமணி உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.

அப்போது, அப்பகுதிகளில் உள்ள மளிகை, தேநீா், பெட்டிக் கடைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தது தெரியவந்தது. அதையடுத்து, கடைகளில் இருந்த 18.5 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து தீயிட்டு அழித்தனா். மேலும், ஒரு கடைக்கு ரூ. 50 ஆயிரமும், மற்றொரு கடைக்கு ரூ. 25 ஆயிரமும் அபராதம் விதித்தனா்.