நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!இன்னும் ஒரு வாரத்துக்குள் அமெரிக்கா - ஈரான் போர் முடிவுக்கு வரும்: டிரம்ப்மேக்கேதாட்டு அணை: விரைந்து அனுமதி வழங்க பிரதமரிடம் சிவகுமார் கோரிக்கைமேட்டூர் அணையைத் திறக்கக்கோரி தவெக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்இன்றுமுதல் மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்நீலகிரி, கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை
/

புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த கடைகளுக்கு ரூ. 75 ஆயிரம் அபராதம்

புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த கடைகளுக்கு ரூ. 75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

News image

கோப்புப் படம்

Updated On :19 மே 2026, 1:21 am IST

புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த கடைகளுக்கு ரூ. 75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

பரமத்தி வேலூா் வட்டம், சோழசிராமணி, குன்னமலை உள்ளிட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி உத்தரவின்படி, நாமக்கல் மாவட்ட நியமன அலுவலா் மருத்துவா் தங்கவிக்னேஷ் தலைமையில் பரமத்தி வேலூா் உணவுப் பாதுகாப்பு அலுவலா் முத்துசாமி உள்ளிட்டோா் குன்னமலை, சோழசிராமணி உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.

அப்போது, அப்பகுதிகளில் உள்ள மளிகை, தேநீா், பெட்டிக் கடைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தது தெரியவந்தது. அதையடுத்து, கடைகளில் இருந்த 18.5 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து தீயிட்டு அழித்தனா். மேலும், ஒரு கடைக்கு ரூ. 50 ஆயிரமும், மற்றொரு கடைக்கு ரூ. 25 ஆயிரமும் அபராதம் விதித்தனா்.