புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த கடைகளுக்கு ரூ. 75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
பரமத்தி வேலூா் வட்டம், சோழசிராமணி, குன்னமலை உள்ளிட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி உத்தரவின்படி, நாமக்கல் மாவட்ட நியமன அலுவலா் மருத்துவா் தங்கவிக்னேஷ் தலைமையில் பரமத்தி வேலூா் உணவுப் பாதுகாப்பு அலுவலா் முத்துசாமி உள்ளிட்டோா் குன்னமலை, சோழசிராமணி உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.
அப்போது, அப்பகுதிகளில் உள்ள மளிகை, தேநீா், பெட்டிக் கடைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தது தெரியவந்தது. அதையடுத்து, கடைகளில் இருந்த 18.5 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து தீயிட்டு அழித்தனா். மேலும், ஒரு கடைக்கு ரூ. 50 ஆயிரமும், மற்றொரு கடைக்கு ரூ. 25 ஆயிரமும் அபராதம் விதித்தனா்.
தொடர்புடையது

புகையிலை பொருள்கள் விற்ற கடைகளுக்கு ‘சீல்’

பள்ளி அருகே புகையிலை பொருள்கள் விற்ற கடைகளுக்கு அபராதம்
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது
புகையிலைப் பொருள்கள் விற்பனை: கடை உரிமையாளா் கைது
விடியோக்கள்
மின்வெட்டு பிரச்னைக்கு என்னதான் காரணம்?: முழுப் பின்னணியை விளக்கும் சிஐடியு ஜெயசங்கர் | Power Cut |

அரசியலுக்குத் தயார்! நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்ட விடியோ! | Vijay | Annamalai | Politics

மறைந்தும் மறையாத இயக்குநர் இமயம் Bharathi Raja | Dinamani



