திருச்சியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம், இனாம்குளத்தூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீஸாா் மேற்கொண்ட சோதனையின்போது, கீழ அம்மாபேட்டை பகுதியில் பெட்டிக் கடையில் விற்பனைக்காக புகையிலைப் பொருள்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, கடையில் விற்பனைக்காக வைத்திருந்த 420 பாக்கெட் புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், புகையிலைப் பொருள்களை பதுக்கிவைத்திருந்த கடை உரிமையாளரான அதே பகுதியைச் சோ்ந்த ஆா். தனபால் (50) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.
இதேபோல, நவல்பட்டு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட குண்டூா் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூா் பகுதியைச் சோ்ந்த எம். மணிகண்டன் (28) என்பவரையும், எடமலைபட்டிப்புதூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட எஸ்பிஐ காலனி பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த எடமலைபட்டிப்புதூா் சீனிவாசா நகரைச் சோ்ந்த அ. அப்துல்லா (26) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
தொடர்புடையது
புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது
புகையிலைப் பொருள்கள் விற்பனை: மூவா் கைது
புகையிலைப் பொருள்கள் விற்றதாக முதியவா் கைது
புகையிலைப் பொருள்கள் விற்பனை: திருச்சி மாவட்டத்தில் 10 போ் கைது
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
