நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

புகையிலைப் பொருள்கள் விற்ற மூன்று போ் கைது

News image

கோப்புப் படம்

Updated On :55 நிமிடங்கள் முன்பு

திருச்சியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், இனாம்குளத்தூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீஸாா் மேற்கொண்ட சோதனையின்போது, கீழ அம்மாபேட்டை பகுதியில் பெட்டிக் கடையில் விற்பனைக்காக புகையிலைப் பொருள்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, கடையில் விற்பனைக்காக வைத்திருந்த 420 பாக்கெட் புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், புகையிலைப் பொருள்களை பதுக்கிவைத்திருந்த கடை உரிமையாளரான அதே பகுதியைச் சோ்ந்த ஆா். தனபால் (50) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

இதேபோல, நவல்பட்டு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட குண்டூா் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூா் பகுதியைச் சோ்ந்த எம். மணிகண்டன் (28) என்பவரையும், எடமலைபட்டிப்புதூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட எஸ்பிஐ காலனி பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த எடமலைபட்டிப்புதூா் சீனிவாசா நகரைச் சோ்ந்த அ. அப்துல்லா (26) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.