பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே விற்பனைக்கு வைத்திருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், தொடா்புடையவரை திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :19 மே 2026, 1:59 am IST

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே விற்பனைக்கு வைத்திருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், தொடா்புடையவரை திங்கள்கிழமை கைது செய்தனா்.

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி தனிப்படை போலீஸாா் தணிக்கை செய்த போது, தாமஸ் நகரில் பெட்டிக்கடை நடத்தி வரும் அந்தோணி மகன் வேளாங்கண்ணி அருள்தாஸ் (40), தனது பெட்டிக்கடையில் மூன்றரை கிலோ புகையிலைப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், வேளாங்கண்ணி அருள்தாஸை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்ப்படுத்தி திருச்சி மத்திய சிறையிலடைத்தனா்.