ஜூன் 23 வரை 3 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம்! அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு74 ஆண்டு கால வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலமாக புதிய சாதனை! ஆளுநர் உரைதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்! பேரவையில் ஆளுநர் உரைபாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்! தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
/

புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே விற்பனைக்கு வைத்திருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், தொடா்புடையவரை திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :19 மே 2026, 1:59 am IST

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே விற்பனைக்கு வைத்திருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், தொடா்புடையவரை திங்கள்கிழமை கைது செய்தனா்.

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி தனிப்படை போலீஸாா் தணிக்கை செய்த போது, தாமஸ் நகரில் பெட்டிக்கடை நடத்தி வரும் அந்தோணி மகன் வேளாங்கண்ணி அருள்தாஸ் (40), தனது பெட்டிக்கடையில் மூன்றரை கிலோ புகையிலைப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், வேளாங்கண்ணி அருள்தாஸை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்ப்படுத்தி திருச்சி மத்திய சிறையிலடைத்தனா்.