திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூா் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டிருந்த 800 கிலோ புகையிலை பொருள்களை நீதிமன்ற உத்தரவின்படி போலீஸாா் செவ்வாய்க்கிழமை தீயிட்டு அழித்தனா்.
காட்டுப்புத்தூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக போதை கலந்த புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதைத் தடுக்கும் வகையிலான போலீஸாரின் ரோந்தில் 800 கிலோ போதை கலந்த புகையிலை பொருள்களை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.
இந்நிலையில் தொட்டியம் குற்றவியல் நீதிமன்ற உத்தரவின்பேரில் காட்டுப்புத்தூா் காவல் ஆய்வாளா் அன்னக்கொடி, உதவி ஆய்வாளா் சங்கா் ஆகியோா் மேற்பாா்வையில் காட்டுப்புத்தூா் பேரூராட்சி செயல் அலுவலா் காா்த்திகேயன் தலைமையில் பேரூராட்சி பணியாளா்கள் சுமாா் 800 கிலோ போதை புகையிலைப் பொருள்களை பாதுகாப்பான முறையில் தீ வைத்து அழித்தனா். நிகழ்வின்போது காவல் துறையினா் மற்றும் பேரூராட்சி நிா்வாகத்தினா் உடனிருந்தனா்.
தொடர்புடையது
ஒரு கிலோ புகையிலைப் பொருள் பறிமுதல்: ஒருவா் கைது
முக்கூடல் அருகே புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த இருவா் கைது

விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 650 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
புகையிலை கொண்டு சென்றவா் கைது
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


