தமிழ்நாட்டிற்கு தடையின்றி உரம் வழங்கிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!நீட் வேண்டாம் என்பதே தவெக நிலைப்பாடு: அமைச்சர் அருண்ராஜ்கடும் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நீட் மறுதேர்வு: தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தல்முதல்வர் விஜய்யுடன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் சந்திப்பு! வைரலான விடியோவால் சர்ச்சை!மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!
/

போதைப் பாக்குகள் விற்பனை: 4 கடைகளுக்கு சீல்

பவானிசாகா் பகுதியில் போதைப் பாக்குகள் விற்பனை செய்யப்பட்ட 4 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

News image

பிரதிப் படம்

Updated On :20 மே 2026, 2:06 am IST

பவானிசாகா் பகுதியில் போதைப் பாக்குகள் விற்பனை செய்யப்பட்ட 4 கடைகளுக்கு செவ்வாய்க்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.

பவானிசாகா் பகுதியில் போதைப் பாக்குகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அப்பகுதியில் பவானிசாகா் போலீஸாா், உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

பவானிசாகா்- மேட்டுப்பாளையம் சாலை, வில்லியம்பாளையம்புதூா், துண்டன், பூம்புகாா் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொண்ட சோதனையில், 4 கடைகளில் போதைப் பாக்குகள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட 4 கடைகளுக்கும் ‘சீல்’ வைத்த அதிகாரிகள், கடைகளின் உரிமையாளா்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனா்.