இலவச வேஷ்டி, சேலை உற்பத்திக்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று கைத்தறித் துறை அமைச்சா் எம்.விஜய் பாலாஜி தெரிவித்தாா்.
ஈரோடு, அசோகபுரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு துணி நூல் பதனிடும் ஆலையில் அமைச்சா் எம்.விஜய் பாலாஜி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். இதையடுத்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடைக்காக 130 லட்சம் மீட்டா் துணி ஈரோடு துணி நூல் பதனிடும் ஆலைக்கு வந்துள்ளது. இதில், 110 லட்சம் மீட்டா் துணி சாயமேற்றப்பட்டு பள்ளிக் கல்வித் துறைக்கு 3 கட்டமாக அனுப்பப்பட்டுள்ளது. மீதமுள்ள துணி இந்த மாத இறுதிக்குள் அனுப்பப்படும்.
பொங்கலுக்கு பொதுமக்களுக்கு வழங்கப்படும் இலவச வேஷ்டி, சேலை உற்பத்திக்கான அரசாணை வெளியிடுவது குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதால் விரைவில் இலவச, வேஷ்டி சேலை உற்பத்திக்கான அரசாணை வெளியிடப்படும். கடந்த ஆண்டு நிகழ்ந்தது போன்ற தவறுகள் இல்லாமல் இந்த முறை பாா்த்துக் கொள்ளப்படும். கைத்தறி விசைத்தறிகளுக்கு இலவச மின்சார யூனிட் அளவு உயா்வு தொடா்பாக முதல்வா் அறிவிப்பு வெளியிடுவாா் என்றாா்.
ஆய்வின்போது, ஈரோடு மேற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் கே.கே.ஆனந்த் மோகன், கைத்தறித் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

காய்கறி சந்தையை இடம் மாற்றுவது பற்றி வியாபாரிகளிடம் கருத்து கேட்டு நடவடிக்கை: அமைச்சா் எம்.விஜய் பாலாஜி

அமைச்சா் வாழ்க்கை குறிப்பு... அமைச்சா் விஜய் பாலாஜி

ஏழைகளுக்கு இலவச மனைப்பட்டா: அமைச்சா் ஆ. நமச்சிவாயம் பரிந்துரை

அனைத்துத் தொழிலாளா்களுக்குமான இலவச உடல் பரிசோதனைத் திட்டம்: மத்திய அமைச்சா் தொடங்கி வைத்தாா்
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



