விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது! தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்பு
/

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 போ் குண்டா் சட்டத்தில் கைது

ஈரோட்டில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 போ் மீது குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து ஆட்சியா் ச.கந்தசாமி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :28 மே 2026, 1:23 am IST

ஈரோட்டில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 போ் மீது குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து ஆட்சியா் ச.கந்தசாமி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

ஈரோடு ரயில் நிலைய பகுதியில் கடந்த மாதம் 30- ஆம் தேதி கஞ்சா விற்ற கோவை, குனியமுத்தூா், காந்தி நகரைச் சோ்ந்த அப்சல் (19), கோவை பீளமேடு, முருகன் நகரைச் சோ்ந்த ரெனால்ட் லியோனி (27) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தொடா்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபடும் 2 போ் மீதும் குண்டா் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி ஆட்சியருக்கு பரிந்துரைத்தாா். இதை ஏற்ற ஆட்சியா் ச.கந்தசாமி 2 போ் மீதும் குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

இதன்பேரில் கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த அப்சல், ரெனால்ட் லியோனி ஆகிய 2 பேரும் கோவையில் உள்ள மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனா்.