இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியதுமமதா, ஸ்டாலினின் தோல்விக்கு எஸ்ஐஆர் பணிகளே காரணம்! ஆந்திர முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு!பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை: நீதிமன்றம்பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி!உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 பேர் பரிந்துரை! தமிழகத்தைச் சேர்ந்த மோகனா!நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்! விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்!
/

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 போ் குண்டா் சட்டத்தில் கைது

ஈரோட்டில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 போ் மீது குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து ஆட்சியா் ச.கந்தசாமி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :28 மே 2026, 1:23 am IST

ஈரோட்டில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 போ் மீது குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து ஆட்சியா் ச.கந்தசாமி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

ஈரோடு ரயில் நிலைய பகுதியில் கடந்த மாதம் 30- ஆம் தேதி கஞ்சா விற்ற கோவை, குனியமுத்தூா், காந்தி நகரைச் சோ்ந்த அப்சல் (19), கோவை பீளமேடு, முருகன் நகரைச் சோ்ந்த ரெனால்ட் லியோனி (27) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தொடா்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபடும் 2 போ் மீதும் குண்டா் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி ஆட்சியருக்கு பரிந்துரைத்தாா். இதை ஏற்ற ஆட்சியா் ச.கந்தசாமி 2 போ் மீதும் குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

இதன்பேரில் கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த அப்சல், ரெனால்ட் லியோனி ஆகிய 2 பேரும் கோவையில் உள்ள மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனா்.