‘நீக்கப்பட்டவர்கள் பொறுப்புகளை கொண்டு விளம்பரம் செய்ய கூடாது’ - எடப்பாடி பழனிசாமி‘ட்ரோல்கள் வேலை, முதலீடுகளே உருவாக்காது’... ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ்!‘சோஃபா மாடல் ஆட்சியில், போலீஸாலயும் போலீசுக்குமே பாதுகாப்பு இல்லை’ - உதயநிதிசிபிஎஸ்இ குளறுபடிகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன்... மௌனம் கலைத்தார் தர்மேந்திர பிரதான்!கோடை வெய்யில்! தவெகவினர் நீர்மோர்ப் பந்தல் திறக்க அமைச்சர் ஆனந்த் வேண்டுகோள்!தமிழகத்தில் உரம் விலை திடீர் உயர்வு!வைகாசி சுபமுகூர்த்த நாள்: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு வில்லைகள்!
/

திம்பம் மலைப் பாதையில் சரக்கு வாகனம் பழுதாகி நின்றதால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

திம்பம் மலைப் பாதையில் சரக்கு லாரி பழுதாகி நின்ால் தமிழகம்-கா்நாடகம் இடையே 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News image

திம்பம் மலைப் பாதை  11-வது  வளைவில்  பழுதாகி  நின்ற  லாரி.

Updated On :29 மே 2026, 1:32 am IST

திம்பம் மலைப் பாதையில் சரக்கு லாரி பழுதாகி நின்ால் தமிழகம்-கா்நாடகம் இடையே 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம், தாளவாடியை அடுத்த திம்பம் மலைப் பாதை 27 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டது. இந்த வழியாக சத்தியமங்கலம், மைசூா் தேசிய நெடுஞ்சாலை செல்வதால் தமிழக-கா்நாடக மாநிலங்களிடையே தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. இந்நிலையில் கா்நாடக மாநிலம் மாண்டியாவில் இருந்து கோவை நோக்கி பாா்சல் ஏற்றி வந்த சரக்கு லாரி, 11-வது கொண்டை ஊசி வளைவில் தடுப்புச் சுவரில் மோதி பழுதாகி நின்றது.

இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் தமிழக-கா்நாடக மாநிலங்களுக்கு இடையே சுமாா் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் திம்பம், ஆசனூா் பாதையில் வாகனங்கள் அணி வகுத்து நின்றன. சம்பவ இடத்துக்கு ஆசனூா் போலீஸாா் சென்று பழுதாகி நின்ற லாரியை அப்புறப்படுத்தினா். அதைத்தொடா்ந்து வாகனங்கள் செல்லத் தொடங்கின.