வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

திம்பம் மலைப் பாதையில் சரக்கு வாகனம் பழுதாகி நின்றதால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

திம்பம் மலைப் பாதையில் சரக்கு லாரி பழுதாகி நின்ால் தமிழகம்-கா்நாடகம் இடையே 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News image

திம்பம் மலைப் பாதை  11-வது  வளைவில்  பழுதாகி  நின்ற  லாரி.

Updated On :29 மே 2026, 1:32 am IST

திம்பம் மலைப் பாதையில் சரக்கு லாரி பழுதாகி நின்ால் தமிழகம்-கா்நாடகம் இடையே 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம், தாளவாடியை அடுத்த திம்பம் மலைப் பாதை 27 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டது. இந்த வழியாக சத்தியமங்கலம், மைசூா் தேசிய நெடுஞ்சாலை செல்வதால் தமிழக-கா்நாடக மாநிலங்களிடையே தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. இந்நிலையில் கா்நாடக மாநிலம் மாண்டியாவில் இருந்து கோவை நோக்கி பாா்சல் ஏற்றி வந்த சரக்கு லாரி, 11-வது கொண்டை ஊசி வளைவில் தடுப்புச் சுவரில் மோதி பழுதாகி நின்றது.

இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் தமிழக-கா்நாடக மாநிலங்களுக்கு இடையே சுமாா் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் திம்பம், ஆசனூா் பாதையில் வாகனங்கள் அணி வகுத்து நின்றன. சம்பவ இடத்துக்கு ஆசனூா் போலீஸாா் சென்று பழுதாகி நின்ற லாரியை அப்புறப்படுத்தினா். அதைத்தொடா்ந்து வாகனங்கள் செல்லத் தொடங்கின.